வீட்டில் மூட்டை மூட்டையாக தங்கம் சேர அட்சய திருதியை அன்று இந்த குபேர மூட்டையை கட்டி யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற்று தரும் ரகசிய தாந்திரீக பரிகாரம்.

kubera mahalshmi poojai
- Advertisement -

அட்சய திருதியை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தங்கம் வாங்க வேண்டும் என்பது தான். இந்த அட்சய திருதி நாளில் தான் குபேரர் மகாலட்சுமி தாயார் இடம் வரம் பெற்றதாக ஒரு ஐதீகமும் உண்டு. இந்த நாளில் மகாலட்சுமி தாயாரை நாம் எந்த அளவிற்கு போற்றி வழி படுகிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் குபேரருக்கும் இந்த நாளில் தர வேண்டும். செல்வத்தை பாதுகாக்கும் அதிபதியாக விளங்கும் குபேரர் உங்களுக்கும் செல்வ வளத்தை வாரி வழங்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை இந்த நாளில் செய்தால் மிகப் பெரிய பலன் உண்டு என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தங்கம் பெருக அட்சய திருதியில் செய்ய வேண்டியது என்ன
இந்த பரிகாரத்தை அட்சய திருதி அன்று எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். பொதுவாக குபேர பூஜைக்கு உகந்த நேரம் மாலை எனவே மாலையில் இதை செய்தாலும் மிகவும் சிறப்பு.

- Advertisement -

பழங்காலத்தில் யார் வீட்டில் அதிகப்படியான நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கிறாரோ அவரே பெரிய செல்வாதிபதி. அது மட்டும் இன்றி தங்கத்துக்கு நிகரான மதிப்பு இந்த நெல்மணிகளுக்கும் உண்டு. இப்போதும் இந்த குபேர மூட்டை பரிகாரத்திற்கும் நாம் பயன்படுத்த போகும் முக்கியமான பொருள் அந்த நெல் தான்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு கைப்பிடி நிறைய நெல் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, சிறிதளவு பச்சைக் கற்பூரம் அத்துடன் உங்களால் முடிந்த அளவிற்கு அதில் பணத்தை வைக்கலாம். மேலும் இத்துடன் ஒரு சிறிய துண்டு வெள்ளியோ தங்கமோ இருந்தால் வைக்கலாம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் ரூபாய் நோட்டை வைப்பது அவசியம். அனைத்தையும் சேர்த்து ஒரு சாக்கில் சிறிய மூட்டையாக வாழை நாரை பயன்படுத்திக் கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு சாக்கு பையை தான் பயன்படுத்த வேண்டும் துணியை பயன்படுத்த வேண்டாம். அது மட்டும் இன்றி இந்த சாக்கு பை யார் காலும் படாததாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த மூட்டையை பூஜையறையில் வைத்து பூஜை செய்த பிறகு இந்த மூட்டைக்கு சாம்பிராணி தூபம் காட்டி குபேரர் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையில் பணம் நகை எல்லாம் பன்மடங்கு பெருகி நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, உங்கள் சமையலறையில் தென்மேற்கு பகுதியில் மேலே யார் கண்ணிலும் படாதவாறு இந்த மூட்டையை வைத்து விடுங்கள். இந்த மூட்டையை ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இரவு ஏழு மணிக்கு மேல் எடுத்து பூஜை அறையில் வைத்து வழிபட்ட பிறகு சாம்பிராணி தூபம் காட்டி மறுபடியும் இதே போல் வைத்து விடுங்கள்.

இந்த மூட்டையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். இதை மாற்றும் போது இதில் உள்ள நெல்மணிகளை ஓடும் நேரிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விடுங்கள். இதில் இருக்கும் பணத்தை நீங்கள் பணம் வைத்து புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த மூட்டை இருக்கும் இடத்தில் குபேரருடைய பரிபூரண அருளும் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமும் கிடைத்து செல்வ வளம் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தான் இந்த பரிகாரத்தின் ஐதீகம்.

இதையும் படிக்கலாமே: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் இதை வாங்கினால் கூட போதும்

இந்தப் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அட்சய திருதியை அன்று இந்த குபேர முட்டையை கட்டி வழிபாடு செய்து உங்கள் வாழ்க்கையிலும் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -