வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி தடையில்லாமல் சென்று கொண்டே இருக்க குலதெய்வத்திற்கு இந்த பொருளை கொண்டு அர்ச்சனை செய்தால் போதும்.

- Advertisement -

இன்று இருக்கும் நிலைமையிலே நம்முடைய வாழ்க்கை எப்போதும் தொடர வேண்டும் என்று எந்த ஒரு மனிதனும் ஆசைப்படுவது கிடையாது. ஓடி ஓடி பணம் சம்பாதிப்பது எல்லாம் பணத்தை சேர்த்து வைப்பதற்காக மட்டும் இன்றி வாழ்க்கையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதோடு தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல ஒரு கல்வி கொடுத்து அவர்களையும் நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து வைக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியை சாதகமாக்கி கொள்ள குலதெய்வத்திற்கு இந்த ஒரு பொருளால் அர்ச்சனை செய்தால் பலன் உண்டு. அது என்னவென்பதை இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இன்றளவும் எத்தனையோ குடும்பங்களில் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் வாழ்ந்து வந்தாலும், என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கையில் முன்னேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு முன்னேறி நடுத்தரமான வாழ்க்கை வாழ்பவர்கள் அடுத்து ஒரு நிலையை அடையவே ஆசைப்படுபவர்கள். இந்த எண்ணம் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது அவர்களின் அந்த எண்ணம் ஈடேறும் என்று நம்பப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

வாழ்க்கையில் வெற்றி பெற குல தெய்வத்திற்கு செய்ய வேண்டியது:
குலதெய்வத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. நமக்கு எந்த தெய்வத்தினுடைய அருள் கிடைக்க வேண்டும் என்றாலும் அது குலதெய்வத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அது குலதெய்வம் உங்களுக்கு தெரிந்தாலும் சரி அல்லது தெரியாமல் போனாலும் சரி. வாழ்க்கையில் உங்களுக்கு எந்த நல்லதும் குலதெய்வத்தின் அருள் இல்லாமல் கிடைக்காது என்பது மட்டும் உறுதி.

- Advertisement -

அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு நாம் வாரம் ஒரு முறை இந்த பொருளினால் அர்ச்சனை செய்யும் பொழுது நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி செல்லும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு குலதெய்வத்திற்கு வாரம் ஒரு முறை தாமரை மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களால் அவ்வளவு மலர்களை வாங்கி அர்ச்சனை செய்ய வசதி இல்லை என்றாலும், ஒரே ஒரு தாமரை மலரையாவது வாங்கி கொடுக்கலாம்.

இதுவே உங்க குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் நீங்கள் குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம். இதையும் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயமாக வாங்கிக் கொடுத்து செய்ய சொல்லுங்கள். குலதெய்வத்திற்கு நேரில் சென்று அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றாலும் சொல்லி செய்ய சொல்லலாம்.

- Advertisement -

ஒரு வேளை உங்களுக்கு குலதெய்வமே தெரியாது அல்லது குலதெய்வ கோவில் வெகு தொலைவில் உள்ளது உங்களால் செல்ல முடியாது என்பவர்கள். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் இந்த தாமரை மலரை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். ஆண் தெய்வங்களாக இருந்தால் அதற்கு நிகரான தெய்வங்களின் ஆலயங்களுக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வந்தால் குடும்பம் மேலும் மேலும் செல்வ நிலையை அடையும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து சாஸ்திர படி மறந்தும் கூட இவையெல்லாம் பகிரவே கூடாது. பகிர்ந்தால் துரதிஷ்டத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அதுவே உங்களை தேடி வந்து விடும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் பொழுது உங்கள் குடும்பம் எந்த ஒரு தடையும் இல்லாமல் மேலும் மேலும் முன்னேறி நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ குலதெய்வம் துணை நிற்கும்.

- Advertisement -