வாஸ்து சாஸ்திர படி மறந்தும் கூட இவையெல்லாம் பகிரவே கூடாது. பகிர்ந்தால் துரதிஷ்டத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அதுவே உங்களை தேடி வந்து விடும்.

sani bhagavan pen
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டு தான் வாழ்கிறான் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால் நாம் செய்யக் கூடாத சில தவறுகளால் பிரச்சனைகளை நாமே விலை கொடுத்து வாங்கிக் கொண்டு விடுகிறோம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அதாவது நாம் பயன்படுத்தும் சில பொருட்களை எந்த காரணத்திற்காகவும் பிறருடன் பகிரக் கூடாது என்று சொல்லப்படுகிறது அது என்னவென்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிறருடன் பகிரக் கூடாத துரதிஷ்டத்தை தேடித் தரும் பொருள்கள்
இன்றைய நவ நாகரீக காலத்தில் பெண்கள் ஆண்கள் என அனைவருமே உடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறார்கள். இது செய்யக் கூடாத ஒரு விஷயமாக வாஸ்து பார்க்கிறது. ஆடைகளை பகிர்ந்து கொள்வது சில சமயங்களில் அன்பின் அடையாளமாக வெளிப்படுகிறது. ஆனாலும் இதனால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க தொடங்கும் என்று சொல்கிறது.

- Advertisement -

அடுத்ததாக காலணிகள் ஒருவர் அணிந்த காலனிகளை பிறர் அணியக் கூடாது இது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் சனி பகவான் பாதத்தில் குடி கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அப்படியான இடத்தில் அணியப்படும் இந்த காலணிகளை ஒருவர் மாற்றி ஒருவர் அணியும் போது அவர்களுக்கு உண்டான தாக்கங்கள் நமக்கு உண்டாவதோடு, சனீஸ்வரரின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

கை கடிகாரத்தை மாற்றி அணிந்து கொள்வதோ அல்லது கடிகாரத்தை பரிசாக அளிப்பது வாங்குவது போன்றவை அனைத்துமே நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறது. இந்தப் பொருட்களும் நம் கைக்கு வரும் பொழுது எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதில் முக்கியமாக பகிர கூடாத ஒன்றாக பேனா பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பேனாவை பொருத்த வரை நாம் வெளியில் எங்கு சென்றாலும் ஏதாவது எழுத வேண்டும் என்றால் சட்டென்று அருகில் இருப்பவர்களிடம் பேனாவை கடனாக வாங்கி எழுதுவோம். இது மிகப் பெரிய தவறு.

பேனாவிற்கும் அந்த நபருடைய அதிர்ஷ்டத்திற்கு மிகவும் நெருங்கிய தொடர்புண்டு. சிலர் பேனாக்களில் கூட அதிர்ஷ்டமானது என்று வைத்திருப்பார்கள். இதை பிறருக்கு தர மாட்டார்கள் அதே போலத் தான் நீங்கள் வாங்கும் நபர் துரதிஷ்டத்தில் இருந்தாலும், கஷ்டத்தில் இருந்தாலும் அந்த பேனாவை நீங்கள் பயன்படுத்தும் போது அந்த துரதிஷ்டமானது உங்களை நிச்சயம் தாக்கும் என்று வாஸ்து சொல்கிறது. இதில் பேனாவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் கைகுட்டைக்கும் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: குரு மற்றும் சுக்கிரனின் அருளால் உங்கள் வீட்டில் பணமானது குறையாமல் இருக்க, வாழ்க்கை மென்மேலும் வளர்ச்சிபெற சமயலறையில் முறையாக இதை மட்டும் செய்தால் கூட போதும்.

இவைகளை எல்லாம் மறந்தும் கூட பிறரிடம் நீங்களும் பகிரக் கூடாது அவர்களிடமிருந்தும் வாங்கக் கூடாது. இவைகளை பகிர்வதாலும் வாங்குவதாலும் நம் வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க நேரம் என்று வாஸ்து சாஸ்திரம் ஆணித்தரமாக நம்புகிறது. இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை பின் தொடரலாம்.

- Advertisement -