தினமும் காலை எழுந்தவுடன் நிலை வாசலில் இதை மட்டும் செய்யுங்கள் போதும். குலதெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது.

sudam
- Advertisement -

தினம் தினம் நம்முடைய வாழ்க்கை சுகமாக நகர்ந்து செல்ல வேண்டும். குடும்பம் ஆலமர விழுது போல அடுத்தடுத்த தலைமுறையை இந்த உலகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்றால், நிச்சயமாக நமக்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் தேவை. குல விருத்திக்கு குலதெய்வ வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும். ஆகவே உங்கள் குடும்பம் காலகாலத்திற்கும் இந்த பூலோகத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றால், தினமும் இந்த ஒரு வழிபாட்டை உங்களுடைய வீட்டில் செய்து வாருங்கள். குறிப்பாக குளம் தழைக்கவில்லை எங்களுக்கு வாரிசு இல்லை, குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கும்.

குலதெய்வம் வீட்டில் தங்க செய்ய வேண்டிய வழிபாடு:
இந்த வழிபாட்டை ஆண்கள், பெண்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள், யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். காலையில் எழுந்து வாசல் பெருக்கி கூட்டி கோலம் போட்ட பின்பு, இரண்டு கற்பூரத்தை கொண்டு போய் இரண்டு மண் அகல் விளக்கில் வைத்து நிலை வாசலுக்கு இரண்டு பக்கம் வைத்து, ஏற்றி விடுங்கள். குலதெய்வத்தை முழுமூச்சோடு நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கற்பூரம் ஏற்றிய பின்பு சிறிது நேரம் அந்த நிலை வாசலில் நின்று உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழையுங்கள். எங்கள் வீட்டு குலதெய்வம் எங்கள் குலத்தை விருத்தி செய்ய வேண்டும். குலம் நன்றாக இருக்க, உங்களின் ஆசிர்வாதம் தேவை என்று உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி அந்த குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

தினம் தினம் நிலை வாசலில் காலையில் இப்படி கற்பூரம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை நினைத்து வீட்டிற்குள் அழைத்தால் வீட்டிற்குள் குலதெய்வம் இல்லை என்றாலும், அந்த குலதெய்வம் தானாக உங்கள் வீடு தேடி வந்துவிடும். உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் வாசம் இருக்கிறது என்றால், அந்த குலதெய்வம் நிரந்தரமாக உங்களுடைய வீட்டிலேயே தங்கும். அதுமட்டுமில்லாமல் இந்த வழிபாடு உங்களுக்கு பல வகையில் நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி ஆக இருப்பீர்கள். பாசிட்டிவ் எனர்ஜி உங்களை சுற்றி இருக்கும். எதிர்மறை ஆற்றலால் எந்த பாதிப்பும் வராது. எதற்கெடுத்தாலும் எதிர்மறை ஆற்றல் என்று சொல்கின்றோமே இது கண்ணுக்கே தெரியவில்லை. இதெல்லாம் பொய்யாக இருக்குமோ என்று நினைக்காதீங்க. நம்மை சுற்றி நல்லது இருப்பது உண்மை என்றால், நம்மை சுற்றி கெடுதல் இருப்பதும் உண்மைதான்.

இதையும் படிக்கலாமே: கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கட்டி அவதிப்படுபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை இப்படி புதைத்து வைத்து விடுங்கள். கடன் எப்படி அடைந்தது என்றே தெரியாமல் அடைந்து விடும்.

ஆகவே துர்சக்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள துர் சக்திகளை பொசுக்கக்கூடிய சக்தி அக்கினிக்கு மட்டும்தான் உண்டு. ஆகவே நீங்கள் காலையில் இந்த கற்பூரத்தை ஏற்றி வழிபாடு செய்து விட்டு உங்கள் நாளை தொடங்கினால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து தான் பாருங்களேன். கற்பூரம் வாங்க லட்சக்கணக்கில்லா செலவு ஆகப்போகின்றது. ஒரு கற்பூரத்தை இரண்டாக உடைத்து சின்ன சின்ன துண்டு கற்பூரத்தை ஏற்றினால் கூட போதும் தான். உங்களுடைய நம்பிக்கை தான் இந்த இடத்தில் மூலதனம். அந்த நம்பிக்கையை வைத்து இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -