வாழ்க்கையில் அஷ்ட லட்சுமிகளின் அருளை பெறுவதற்கும், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றுங்கள். சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமோடு வாழலாம்.

astalakshmi valipadu
- Advertisement -

நம் வாழ்க்கையில் நாம் பல தெய்வங்களை வணங்கி இருப்போம். பல தெய்வங்களின் அருளை பெறுவதற்காக பல வழிபாடுகளை மேற்கொண்டு இருப்போம். இருப்பினும் நம் குலதெய்வத்தின் அருளும், ஆசீர்வாதமும் நமக்கு வேண்டும். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இருந்தால் தான் அது நடக்கும். அப்படி குலதெய்வத்தின் அருளை பெறுவதோடு மட்டும் அல்லாமல், அஷ்ட லட்சுமிகளின் பரிபூரண கடாசத்தையும் பெறுவதற்கு எந்த தீபத்தை நாம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம் குலத்தை காப்பதற்காக நம் வீட்டிலேயே என்றும் நிலைத்திருக்கும் தெய்வம் தான் குலதெய்வம். அந்த குலதெய்வத்தை நாம் முறையாக வழிபட்டால் தான் நம்முடைய வாழ்க்கையில் பல வெற்றிகளை நம்மால் பெற முடியும். வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் வீட்டிலாவது குலதெய்வத்தை நினைத்து நாம் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நம் குலதெய்வம் சாந்தமான தெய்வமாக இருப்பின் அந்த தெய்வத்தின் புகைப்படத்தை நம் வீட்டில் வைத்து நாம் வழிபாடு மேற்கொள்ளலாம். சில பேருக்கு உக்கிரமான தெய்வம் இருப்பின் அந்த தெய்வத்தின் புகைப்படத்தை பொதுவாக நம் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. அந்த நேரத்தில் குலதெய்வத்தை நினைத்து நாம் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி மனதார வழிபட்டாலே போதும். பொதுவாக இலுப்பை எண்ணெயை பயன்படுத்தி நாம் சிவபெருமானுக்கு தான் தீபம் ஏற்றுவோம். ஆனால் அதையும் தாண்டி நம் குலதெய்வத்தை நினைத்து நாம் ஒரு இலுப்ப எண்ணெய் தீபத்தை ஏற்றினாலேயே நம்முடைய குலதெய்வத்தை நம் வீட்டிலேயே நிலைத்திருக்க செய்யும்.

வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை பொழுதில் குலதெய்வத்தை மனதார நினைத்து ஒரு அகல் விளக்கில் இலுப்ப எண்ணெயை ஊற்றி, இரண்டு திரியை ஒன்றாக இணைத்து, குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் வாரவாரம் வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றுவதால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுவது ஆயிரம் நெய் தீபம் ஏற்றுவதற்கு சமமாக கருதப்படுவதால், நமக்கு பல நன்மைகளை இந்த தீபம் ஏற்படுத்தித் தருகிறது. இந்த தீபத்தை ஏற்றி வைத்து நம்முடைய வேண்டுதலை நம் குலதெய்வத்திடம் கூறும் பொழுது, அந்த வேண்டுதல்களை குலதெய்வம் கண்டிப்பான முறையில் நிறைவேற்றும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின் அருள் பெற இந்த பொருளை இன்றே உங்க வீட்டிற்குள் கொண்டு வந்து விடுங்கள் போதும்.

ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட்டாலே, மகாலட்சுமி மனம் குளிர்ந்து நமக்கு நன்மைகளை தருவாள் என்கிறபோது, நாம் ஆயிரம் நெய் தீபத்திற்கு சமமான இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபடுவதால் அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நாம் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ்வோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

- Advertisement -