உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின் அருள் பெற இந்த பொருளை இன்றே உங்க வீட்டிற்குள் கொண்டு வந்து விடுங்கள் போதும்.

murugan fight coin
- Advertisement -

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால் நமக்கு எந்த பயமும் இருக்காது என்பதே இதன் அர்த்தம். அப்படிப்பட்ட மயிலின் இறகை நாம் எப்படி உபயோகப்படுத்தினால் எந்தப் பிரச்சனை தீரும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் மற்றும் தோஷங்களை நீக்குவதற்கு இந்த மயிலிறகு பயன்படுகிறது. மயிலிறகு நம் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அந்த முருகனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு, அவனின் மாமனான கண்ணனின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. கோவில்களிலும், தர்காக்களிலும் இந்த மயிலிறகை வைத்து நம்மை வருடி விடுவார்கள். அதன் மூலம் நம்மிடம் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்ற கருத்து நிலவுகிறது.

- Advertisement -

5 மயில் இறகுகளை நோய்வாய்ப்பட்டவர்களின் படுக்கையின் அடியில் வைப்பதன் மூலம் அவர்களுடைய நோய்கள் அனைத்தும் நீங்கும். வீட்டு நுழைவாயிலின் இருபுறமும் 3 மயில் இறகுகள் வீதம் வைக்க, வீட்டில் இருக்கக் கூடிய வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமண தடை ஏற்பட்டிருக்கும் நபர்கள் அவர்கள் வைத்திருக்கும் ஹேண்ட் பேக் அல்லது பர்ஸ்ஸில் மயிலிறகை வைத்தால் அவர்களுடைய தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால், அவர்களின் படுக்கை அறையில் 7 மயில் இறகுகளை வைப்பதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.
குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுடைய புத்தகத்தில் மயில் இறகையும் அதனுடன் அரச மர இலையையும் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுடைய படிப்பாற்றல் அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். அரச இலை காய்ந்ததும் புதிதாக வேற அரச இலையை மாற்ற வேண்டும்.

- Advertisement -

நாம் உபயோகிக்கும் பணப்பெட்டியில் ஒரு மயிலிறகு, 11 கோமதி சக்கரம், ஒரு சிறிய வலம்புரி சங்கு போன்றவற்றை வைப்பதன் மூலம் பண பற்றாக்குறை அகலும். 9 மயில் இறகுகளை பட்டு துணியால் சுற்றி தொழில் செய்பவர் அமரும் இடத்திற்கு பின்புறம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி தொழில் சிறப்பாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், தினமும் இந்த ஒரு காரியத்தை செய்த பின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டில் தன வசியம் ஏற்பட்டு கோடீஸ்வர யோகம் தானாக உங்களைத் தேடி வரும்.

முருகனின் அருள் பெற்ற இந்த மயிலிறகாய் வைத்தே நமக்கு இருக்கக் கூடிய பிரச்சனைக்கு ஏற்றவாறு இந்த பரிகாரத்தை மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.இந்த பதிவில் உள்ள தகவலில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலோடு பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -