இந்தப் பாலாடை விளக்கு பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் குழந்தை இல்லாத தம்பதியினருக்கும் குழந்தை வரம் கிடைத்திடும்

dhurga
- Advertisement -

நம்மிடம் எத்தனை விதமான செல்வங்கள் இருந்த பொழுதிலும் குழந்தைச் செல்வம் என்ற ஒன்று இல்லை என்றால் இவை அனைத்தும் இருந்தும் இல்லாததற்கு சமமாகும்.பணம் கோடி கோடியாய் கொட்டிக் கிடக்கும் வீடுகளிலும் ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நிறைய தம்பதியினரிடம் இருந்து கொண்டிருக்கிறது. நமது பூர்வ ஜென்மத்திலோ அல்லது இந்த ஜென்மத்திலோ நாம் செய்த பாவங்களின் கர்மவினைகளும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து குழந்தை வரம் கிடைப்பதற்காக பாலாடை தீபத்தை ஏற்றி துர்கை அம்மனை முறையாக வழிபட வேண்டும். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

gold-pot

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் வாரிசு என்பது திருமணமான தம்பதியினர்கள் முதலில் பெற்றெடுக்கும் குழந்தையாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் இருப்பவர்கள் தங்களுக்குத் திருமணம் ஆனவுடன் சிறிது காலம் சந்தோஷமாக இருப்பதற்காகவும், வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பதற்காகவும் குழந்தை பெறுவதை சில காலங்கள் தள்ளி வைக்கின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் தவறினால் நாளடைவில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிடுகிறது.

- Advertisement -

ஒரு சிலர் தங்களது பாவங்களை தீர்ப்பதற்காக கோவில் கோவிலாக சென்று பரிகாரங்கள் செய்து வருகின்றனர். ஒருசிலர் மருத்துவமனைகளுக்கு சென்று பல லட்சங்களை செலவழித்தும் பயனில்லாமல் மனமுடைந்து தங்களுக்குள்ளேயே அழுது கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளினால் உடல்நலம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பலரால் கேட்கப்படும் கேள்விகளினால் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து வெளிவர சக்தி வாய்ந்த இந்த பாலாடை தீபத்தை ஏற்றி துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் அம்மனின் அருள் பெற்று குழந்தை வரம் கிடைக்கிறது.

kovil

இதற்காக முதலில் ஒரு துர்க்கை அம்மனின் படத்தை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். பிறகு குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க பயன்படுத்தும் அலுமினியத்தால் செய்த பாலாடைகளை ஒன்பது எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெய் மற்றும் நல்லெண்ணெயை சம பங்கு இருக்குமாறு கலந்து கொண்டு, ஒன்பது பாலாடைகளிலும் ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் நாட்டு மருந்து கடைகளில் வெள்ளெருக்கு திரி என்று கேட்டு வாங்கி அந்தத் திரியை இந்த பாலாடை விளக்கில் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். பாலாடையின் வாய்ப்புறத்தில் எரியும் தீபம் துர்க்கை அம்மனை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை தொடர்ந்து 48 மண்டலங்கள் அசைவம் எதுவும் சாப்பிடாமல் முறையாக செய்ய வேண்டும். பெண்களுக்கான மாதவிடாய் நேரங்களில் அவர்களின் கணவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். அவ்வாறு இல்லை என்றால் அந்த நாட்கள் மட்டும் தவிர்த்துவிட்டு அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து செய்து வரலாம்.

paladai-sangu

இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து செய்ய முடியாது என்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரம் தோறும் இந்த பூஜையை முறையாக செய்து துர்க்கை அம்மனை வழிபட்டு வருவதன் மூலம் குழந்தை வரம் கிடைத்து மகிழ்வான வாழ்வை பெற முடியும். இந்த பூஜை செய்து முடித்த பிறகு இந்த பாலாடைகளை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யாமல் துணியை வைத்துத் துடைத்து விட்டு அப்படியே எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -