பிறக்கும் குழந்தை இவர்கள் ஜாடையில் மட்டும் இருந்தால் அந்தக் குழந்தையின் வாழ்க்கை நிச்சயம் போராட்டமாகத்தான் இருக்கும்

kulandhai-baby
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்தின் பரம்பரை வாரிசு என்பது அந்த குடும்பத்தில் புதியதாக திருமணமாகி, அவர்களுக்கு ஒரு வாரிசு உண்டாகி, அது இந்த பூமியில் எப்பொழுது தனது பாதம் பதிக்கிறதோ அப்பொழுது தான் அந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அப்படிப் பிறக்கும் குழந்தை யாருடைய சாயலில் இருக்கிறது என்பதை அனைவரும் ஆர்வமாக ஆராய்ந்து பார்ப்பார்கள். பிறக்கின்ற குழந்தை ஒன்று தாய் அல்லது தந்தை ஜாடையிலோ அல்லது தாத்தா பாட்டி ஜாடையிலோ தான் இருக்கும். இப்படி ஒருவருடைய ஜாடையில் இருப்பதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். வாருங்கள் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Baby names Tamil

வீட்டில் இருக்கும் குழந்தைகளை அவர்களின் குணநலன்களை வைத்தும், அவர்களின் உருவத்தை வைத்தும் அப்படியே உன் அப்பாவைப் போல் இருக்கிறாயே, அப்படியே உன் தாயை போல் இருக்கிறாயே என்று சுட்டிக் காட்டுவோம். இவ்வாறு குழந்தைகள் தாய் தந்தை இருவரில் எவராவது ஒருவரின் ஜாடையையும், குணத்தையும் சேர்ந்து பெற்றிருப்பார்கள். அல்லது தாய் ஜாடையில் இருக்கும் குழந்தை தந்தையுடைய குணநலன்களுடனும், தந்தை ஜாடையுடைய குழந்தை தாயின் குணநலன்களுடனும் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

அப்படி வீட்டில் பிறக்கும் ஒரு குழந்தை ஆண் குழந்தையாக இருந்து அது தன்னுடைய அப்பாவின் உருவத்தை அப்படியே பெற்றிருந்தால் அந்த குழந்தையின் சிறு வயதிலோ அல்லது பெரிய வயதிலோ அவர்களின் வாழ்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலைமை உண்டாகும். ஆனால் அதே அந்த ஆண் குழந்தை அம்மாவின் சாயலில் இருந்தது என்றால் தன்னுடைய வாழ்க்கை துன்பமாக இருந்தாலும் கூட அதனை சமாளித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடையும் திறன் பெற்றிருக்கும்.

Baby names Tamil

அதுவே பெண் குழந்தையாக பிறந்து அந்த குழந்தை தாயின் சாயலில் இருந்தால் அந்தக் குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதுவே அந்தப் பெண் குழந்தை தந்தையின் சாயலில் இருந்தால் அதனுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

- Advertisement -

இப்படி தான் ஆண் குழந்தையாக இருந்து பாட்டியின் சாயலில் இருந்தால் அதன் வாழ்க்கை நன்றாக இருக்கும். தாத்தாவின் சாயலில் இருந்தால் அது மிகவும் துன்பப்படும். அதுவே பெண் குழந்தையாக இருந்து பாட்டியின் சாயல் கொண்டிருந்தால் அதன் வாழ்க்கை துன்பமாக அமையும். தாத்தாவின் சாயலில் இருந்தால் அதன் வாழ்க்கை இன்பமாக அமையும்.

girl-baby

இவ்வாறு உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் ஜாடையைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து நீங்களே யோசித்துப் பாருங்கள். இது ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு அதி அற்புதமான உண்மையாகும். எனவே அவர்களின் வாழ்க்கையில் வரும் போராட்டங்களாக இருந்தாலும், மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருந்தாலும் அவற்றை சரியான சிந்தனையுடன் பக்குவமாக எடுத்துச் செல்ல அவர்களுக்கு சிறந்த வழி முறையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

- Advertisement -