குழந்தை பாக்கியம் பெற பரிகாரம்

- Advertisement -

இல்லற வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது குழந்தை பாக்கியம் தான். இறைவனின் வரமான இந்த குழந்தை பேறு என்பது திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. இப்படி திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாமல் தவிப்பவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கின்ற தோஷம் காரணமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதை அறியலாம். அந்த வகையில் ஜாதக தோஷம் காரணமாக குழந்தை பேறு கிடைக்காத தம்பதிகள் செய்ய வேண்டிய குழந்தை பாக்கிய பரிகாரம் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பாக்கியம் பரிகாரம்

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எண்ணினால் வருகின்ற ஐந்தாம் வீடு என்பது மிகவும் பலவீனப்பட்டிருந்தாலும் அல்லது தோஷத்திற்குள்ளாகியிருந்தாலும் அந்த நபருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் அல்லது பிள்ளை பாக்கியமே கிடைக்காமல் போகக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. எனவே குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள் ஒரு நல்ல ஜாதகரைக் கொண்டு தங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு வலுவாக இருக்கின்றதா அல்லது தோஷங்களுடன் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படி ஐந்தாம் வீடு என்பது தோஷத்திற்குள்ளாகி இருந்தால் அந்த ஐந்தாம் வீட்டிற்குரிய நவகிரக நாயகனை வழிபாடு செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நவக்கிரகம் வலுவடையும் வகையிலான ஜோதிட ரீதியிலான பரிகாரங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஐந்தாம் வீட்டு அதிபதியை வலுப்படுத்தும் பரிகாரங்களை மேற்கொள்பவர்களுக்கு உறுதியாக குழந்தை பேறு கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்குகின்ற தம்பதிகள் ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் வாய்ந்த வேதியர்களைக் கொண்டு, அவர்கள் குறித்து கொடுக்கின்ற தினத்தில் தங்கள் இல்லத்திலேயோ அல்லது ஏதேனும் கோயிலிலேயோ நவகிரக ஹோம பூஜை செய்வதால் தம்பதிகள் இருவரின் ஜாதகங்களில் இருக்கின்ற கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி, அவர்களுக்கு விரைவிலேயே அறிவும், அழகும் மிகுந்த குழந்தை பேறு கிடைக்க வழிவகை செய்யும்.

- Advertisement -

நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு குழந்தை பேறு அருளும் கிரகமாக குருபகவான் திகழ்கிறார். எனவே குழந்தை இல்லா தம்பதிகள் தங்களுக்கு அறிவும், ஆரோக்கியமும் நிறைந்த குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவானுக்கு விரதம் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து 16 வியாழக்கிழமைகள் குரு பகவானுக்கு விரதம் மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு விரைவிலேயே நல்ல குழந்தை பேறு கிடைக்கும். இந்த குருபகவான் விரதத்தை தம்பதிகள் இருவருமே சேர்ந்து கடைப்பிடித்தால் பலன் அதிகம்.

இதையும் படிக்கலாமே: சனி திசை பரிகாரங்கள்

மற்ற அனைத்து கிரகங்களை காட்டிலும் ராகு – கேது ஆகிய இரு நிழல் கிரகங்கள் பலன்களை தருவதில் ஆற்றல் மிக்கவை என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒருவர் ஜாதகத்தில் ராகு – கேது நல்ல நிலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த ராகு கேது என இருவரின் அருளை பெறும் வகையில் வழிபாடு தொடர்ந்து செய்து வருவதால் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -