குழப்பங்கள் நீக்கும் சிவ ரட்சை.

kulappam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் குழப்பங்கள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நிம்மதியை தருவதற்கு மனதில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. அதே சமயம் வீட்டிலும் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் நிம்மதியான சுகமான வாழ்க்கையை வாழ முடியும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குழப்பங்களை நீக்கி நிம்மதியை தரக்கூடிய சிவ ரட்சை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சிவபெருமானின் அம்சம் நிறைந்த பொருட்களாக பல பொருட்கள் திகழ்கின்றன. அந்த பொருட்களை நாம் பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அது நம்மை காக்கும் சிவ ரட்சையாக மாற்றப்படுகிறது. சிவபெருமானுக்குரிய பொருள் நம்மை காக்கும் பட்சத்தில் அதை நாம் சிவ ரட்சை என்று கூறுகிறோம். அப்படி கூறப்படும் மிகவும் முக்கியமான சிவம்சம் பொருந்திய பொருட்களுள் ஒன்று தான் வில்வம்.

- Advertisement -

இந்த வில்வத்தை நாம் சிவபெருமானுக்குரிய இலையாக கருதுகிறோம். மேலும் இந்த இலை நம்முடைய பாவங்களை போக்க உதவக்கூடிய ஒரு அற்புதமான இலையாக திகழ்கிறது. யாரொருவர் இந்த இலையை வைத்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களின் பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வில்வத்தை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி உண்டாகும் என்று கூறப்படுகிறது.

நகை செய்யும் கடைகளுக்கு சென்று வெள்ளியில் வில்வ இலை வேண்டும் என்று கேட்டால் செய்து தருவார்கள். அந்த வில்வ இலையை வாங்கி வந்து சிவபெருமானின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்துவிட்டு நம் வீட்டு வாசலில் உள்புறத்தில் சந்தனம் அல்லது அரக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இந்த வெள்ளி வில்வ இலையை ஒட்டி வைத்து விட வேண்டும். பிறகு இதற்கு சந்தனம் குங்குமம் இட்டு காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யும்பொழுது சாம்பிராணி தூபம் காட்டி வழிபட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் வீடானது புனிதத் தன்மை அடையும். வீட்டின் இருக்கக்கூடிய குழப்பங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எப்பேற்பட்ட குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாலும் அந்த குழப்பங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். வெள்ளியில் வில்வ இலை செய்து வைக்க முடியாதவர்கள் சாதாரண வில்வ இலைகளை அதாவது சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட வில்வ இலைகளை ஒரு மூட்டையாக கட்டி வீட்டு நிலை வாயிலில் கட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலமும் இந்த வில்வ இலை நம்மை காக்கும் இரட்சையாக மாறி நம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளை விலக்கி நம்முடைய குழப்பங்களை அகற்றி மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் வாரி வழங்கும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை வழிபாடு

பல அற்புதமான மருத்துவ குணம் கொண்ட வில்வ இலையை நாம் சிவபெருமானின் அம்சமாகவே நினைத்து பாவித்து வழிபடுவதன் மூலம் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற்று அனைத்து பாவங்களில் இருந்தும் வெளிவந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -