பெண் பிள்ளை இருக்கும் குடும்பத்தில் இந்த 1 தவறு செய்தால் அது உங்கள் குலத்தையே நாசம் செய்து விடுமாம் தெரிந்து கொள்ளுங்கள்!

girl-couple
- Advertisement -

ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் என்று எல்லோருமே இருப்பது தான் மகிழ்ச்சிக்கு உரியது ஆகும். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் சொலவடை சொல்வது உண்டு. ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் இருக்கும் பெண் பிள்ளையை திருமணம் முடித்து கொடுத்த பிறகு இந்த ஒரு தவறை நீங்கள் செய்தால் உங்கள் குலம் அடுக்கடுக்காக பிரச்சனைகளை சந்திக்கும் என்று எச்சரிக்கிறது ஆன்மீகம்! அது என்ன? என்பதை இனி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பெண்களுடைய சுதந்திரமும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஆண் பிள்ளைக்கு கிடைக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் இப்போது பெண் பிள்ளைகளுக்கும் கிடைக்கிறது. இருப்பினும் பெண் பிள்ளைகளை கருவிலேயே கொல்லப்படுவது இன்று வரை நீடிக்க தான் செய்கிறது. உலக அளவில் பெண்களைக் காட்டிலும், ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காலப்போக்கில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.

- Advertisement -

ஒரு குடும்பத்தில் பெண்ணாக பிறந்து, வளர்ந்து திருமணம் முடிந்து, புகுந்த வீட்டிற்கு சென்றதும் பிறந்த வீட்டிற்கும், அவளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் துண்டிக்கப்படுவது மிகப்பெரிய பாவ செயலாக இருக்கிறது. திருமணம் முடித்துக் கொடுத்தாயிற்று இனி எந்த கவலையும் இல்லை என்று தண்ணி தெளிச்சு விடும் குலமானது அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்கும். தேவையில்லாத வம்பு, வழக்குகள், துர்மரணங்கள், துர் சம்பவங்கள், குழந்தையின்மை பிரச்சனை வரக்கூடும் என்கிறது ஆன்மீகம்.

உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண் வேறு ஒரு குடும்பத்திற்கு சென்று விட்டாலும் அவள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் இந்த குடும்பம் பேரும், புகழோடும் சிறப்பாக இருக்கும். பெண் பிள்ளையை புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டோம் என்று நீங்கள் அலட்சியமாக இல்லாமல் அவள் அங்கு எப்படி இருக்கிறாள்? மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

- Advertisement -

நல்ல நாள், விசேஷம், திருமண நாள் போன்ற நாட்களில் தம்பதியராக அழைத்து அவர்களுக்கு வஸ்திர தானம் செய்து, வயிறார அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைக்க வேண்டும். இதனால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் நிறைய பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. உறவுகள் வலுப்பட மட்டும் அல்லாமல், இது போன்ற செயல்கள் குடும்ப பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சுயநலமாக சிந்திக்காமல் உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளின் வாழ்வில் நீங்கள் எப்போதும் ஒரு பங்காற்றுவது நல்லது.

சகோதர, சகோதரிகளுக்கு வருடம் ஒரு முறை சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து பச்சை நிறத்தில் புடவை வாங்கி கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை பலப்படும். மேலும் குடும்பத்தில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் தீரகூடும். குறிப்பாக தாய், தந்தையரை இழந்த திருமணம் முடித்த பெண்களுக்கு அவளுடைய குடும்பத்தார் அப்படியே விட்டு விடாமல் இது போன்ற செயல்களை செய்து மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டால் அந்த மகாலட்சுமியே உங்களுக்கு செல்வ மழையை பொழிய வைப்பால் என்கிறது ஆன்மீகம் எனவே பெண் பிள்ளைகளை ஏங்க விடாமல் திருமணம் முடிந்த பிறகும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்து நீங்களும் உங்கள் குலத்தை காத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -