குடும்பம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க, உறவுகள் சொந்தபந்தத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு சுலபமான சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம்.

family
- Advertisement -

சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்கள் என்று சேர்ந்து இருப்பது தான் ஒரு குடும்பம். பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, மாமனார் மாமியார், என்று எல்லோரும் இருந்தும், இன்று சில குடும்பங்கள் உறவுகளை பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சண்டைபோட்டு பிரிந்து, கூட்டு குடும்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய் விட்டது. குடும்பத்தில் சண்டை இல்லாமல் இருக்க ஒருவர் சொல்கின்ற பேச்சை, மற்றவர்கள் கேட்டு நடக்க செய்யவேண்டிய தாந்திரீக ரீதியான பரிகாரம் என்ன என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight-1

குடும்பத்தில் சண்டை சச்சரவுகளோடு இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் இருந்தாலும், குழந்தைகள் சரியாக படிக்காமல் இருந்தாலும், கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தாலும் சரி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமியார் மருமகள் என்று யாருகுள் ஒற்றுமை இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 2 4 7 3 என்ற எண்ணை எழுதவேண்டும். அந்த எண்ணுக்கு கீழே எந்த 2 நபருக்கு பிரச்சினையாக உள்ளதோ, அந்த இரண்டு நபரின் பெயரை எழுத வேண்டும். இந்த பேப்பரில் வசம்புத் தூள் 1 ஸ்பூன், பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை, வல்லாரைகீரை தூள் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களை வைத்து அந்த காகிதத்தை மடித்து கண்ணுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

இப்படி வைத்தால் உறவுகளுக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது தாந்திரீக ரீதியாக செய்யக்கூடிய பரிகாரம். இப்படி எழுதி வைத்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே அந்த பேப்பரில் எழுதி வைத்தீர்கள் அல்லவா, அந்த இரண்டு நபர்களுக்கு இடையே இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும். அவர்களை அறியாமலேயே அந்த 2 நபர்களுக்கும் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுடைய பிள்ளை சரியாக படிக்கவில்லை என்றால், பேப்பரில் மேலே சொல்லப்பட்டிருக்கும் எண்களை எழுதி, உங்கள் பிள்ளையின் பெயரை எழுதி, மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்று பொருட்களையும் அந்த பேப்பரில் வைத்து ‘உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்’ என்று எழுதி இந்த பேப்பரை மடித்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துவிடுங்கள். உங்களுடைய பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடந்து நன்றாக படிப்பார்கள்.

vallarai-podi

இதேபோல் ஒரு சில வீடுகளில் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் எல்லோரும் அனுசரித்து செல்வார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் குடும்பத்திற்கு அடங்காமல் இருப்பார்கள். அந்த நபரை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை பிரயோகப்படுத்தி பார்க்கலாம்.

family2

அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை இந்த காகிதத்தில் எழுதி, அவர் ‘எல்லோரையும் அனுசரித்துச் செல்லவேண்டும்’ என்றபடி எழுதினாலும் அது நிச்சயம் நடக்கும். (48 நாட்கள் கழித்து உங்கள் வீட்டில் வைத்திருக்கும் அந்த பேப்பரை கிழித்து, உள்ளே இருக்கும் பொருட்களோடு சேர்த்து கால் படாத இடத்தில் தூக்கி போட்டுவிடலாம்.) உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் ஒரு முறை முயற்சித்து தான் பாருங்களேன். நஷ்டம் ஆவதற்கு எதுவுமில்லை. பரிகாரம் பலித்தால் உங்களுடைய குடும்ப ஒற்றுமை பலம் பெறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -