உச்சி முதல் பாதம் வரை அழகாக கொஞ்சம் குங்குமப்பூ இருந்தால் போதும். அப்புறம் குங்குமப்பூ சிகப்பா நீங்க சிகப்பான்னு யோசிக்கிற அளவுக்கு கலரா மாறிடுவீங்க.

kunkumapoo
- Advertisement -

குங்குமப்பூ என்ற உடன் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது கர்ப்ப காலத்தில் குங்கும பூவை தொடர்ந்து சாப்பிடும் போது குழந்தை நல்ல நிறத்துடன் பிறக்கும் என்பது மட்டுமே. ஆனால் இந்த குங்குமப் பூவை வைத்து நல்ல சிகப்பான மேனி அழகையும் பெறலாம். அது எப்படி என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிகப்பாக நல்ல அழகுடன் மிளிர வேண்டும் என நினைக்கும் பெண்கள் குங்கும பூவை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் பிரமிக்க வைக்கும் மேனி அழகை பெறலாம். இந்த குங்குமப்பூவின் விலை சற்று கூடுதல் தான் இருந்தாலும் தினமும் ஒரு சிட்டிகை அளவு பயன்படுத்தி வரும் பொழுது முகத்தில் தோன்றும் அனைத்து விதமான அழகு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்து விடலாம். அழகு நிலையத்திற்கு எவ்வளவோ செலவு செய்யும் நாம் இதற்கு செலவு செய்வதில் ஒன்றும் தவறில்லை என்றே சொல்லலாம். அது மட்டும் இன்றி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

- Advertisement -

குங்குமப்பூவை வைத்து முக அழகை பெற:
ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு குங்கும பூவை சேர்த்து ஊற விட வேண்டும். குங்குமப்பூவில் இருக்கும் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கிய பிறகு அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து அதில் வெண்ணெய் கலந்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த பேஸ்டை இரவு தூங்கும் முன்பு உங்கள் முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து மசாஜ் செய்து முகத்தை அலம்பிய பிறகு தூங்க செல்லலாம்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முக வறட்சி போன்றவை அனைத்தும் நீங்கி விடும். அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு முகம் நல்ல வெண்மையாக இருக்கும் ஆனால் உதடு கருப்பாக இருக்கும். இந்த வெண்ணை சேர்த்த குங்குமப்பூ கலவையை தேய்க்கும் பொழுது முழு உதடும் நல்ல சிவப்பாக மாறி விடும்.

அதே போல் குங்குமப்பூவை முகத்தில் தேய்க்கும் போது கண்களின் இமை முடிகளும் வளரும். கண்களும் நல்ல வசீகர அழகுடன் காணப்படும். இதை விரல் நகங்களில் மீது தேய்க்கும் பொழுது நகங்கள் நல்ல பாலிஷ் ஆவது உடன் பூச்சி நகங்கள் கூட சரியாகி விடும். வெயிலினால் ஏற்படும் முக கருத்திட்டுகள், முகப்பருக்கள் போன்றவை கூட இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தும் பொழுது சரியாகி விடும்.

- Advertisement -

இதே குங்கும பூவை பவுடர் செய்து சிறிதளவு பசும்பாலில் குழைத்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதையும் இதே போல முகத்தில் தேய்த்து வரலாம். அப்படி செய்யும் பொழுதும் நம்முடைய முகம் இயற்கையான பொலிவை பெறுவதுடன், நல்ல சிவப்பழகையும் பெறலாம்.

இதே குங்குமப் பூவே பாலில் கலந்து பருகி வரும் பொழுது முழு உடலுமே நல்ல ஒரு மினுமினுக்கு தன்மைக்கு மாறி விடும். ஆனால் இந்த குங்கும பூவை சிறிதளவு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அதிகமாக பயன்படுத்தும் பொழுது இது சிவப்பழகை கொடுப்பதற்கு பதிலாக நிறத்தை கருமையாக மாற்றி விடும் அபாயமும் உண்டு.

இதையும் படிக்கலாமே: முகத்திற்கு என்னதான் பவுடர் போட்டாலும் 10 நிமிடத்தில் எண்ணெய் வழிகிறதா? நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 10 ஆய்லி ஸ்கின் டிப்ஸ் இதோ!

நீங்களும் குங்குமப் பூவை பயன்படுத்தும் பொழுது அதை சரியான அளவில் பயன்படுத்தி நல்ல இயற்கையான மேனி அழகை பெறலாம் என்பதோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -