வெள்ளி விளக்கில் இந்த 1 பொருளை போட்டு தீபம் ஏற்றினால், செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுப்பாள் மகாலட்சுமி.

deepam
- Advertisement -

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்க்கு லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய சக்தி உள்ளது. பூஜைஅறையில் பித்தளையின் நிறைய விலங்குகளை வைத்து இருந்தாலும், ஒரே ஒரு வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். நிறைய பேர் வீடுகளில் இன்று வெள்ளி விளக்கு இருக்கிறது. ஆனால் அதை யாரும் பூஜை அறையில் ஏற்றி வைத்து வழிபாட்டிற்காக பயன்படுத்துவது கிடையாது. வெள்ளி விளக்கை பூஜை அறையில் வைத்து ஏற்றலாமா கூடாதா என்ற சந்தேகம் ஒருபக்கம் இருக்க, வெள்ளி விளக்கை பூஜையறையில் ஏற்றி பயன்படுத்தினால் அது கறுத்துப் போகும் என்பதற்காகவும் சிலபேர் வெள்ளி விளக்கை பீரோவில் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுடைய வீட்டில் வெள்ளி விளக்கு இருந்தால் ஒரே ஒரு வெள்ளி விளக்கை எடுத்து கழுவி மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக்கூடிய அத்தனை கஷ்டத்திற்கும் விடிவு காலம் பிறக்கும். பணக்கஷ்டம் முதல் மனகஷ்டம் வரை.

- Advertisement -

வெள்ளி விளக்கிற்கு அத்தனை பெரிய சக்தி உள்ளது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் வெள்ளி விளக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து வெள்ளியில் உங்களால் முடிந்த சிறிய ஏதாவது ஒரு விளக்கை வாங்கலாம். காமாட்சி அம்மன் விளக்கு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சின்னதாக வெள்ளியில் விளக்கு கிடைத்தாலும் அதை வாங்கி பூஜை அறையில் வைத்து ஏற்றி வந்தால் வீட்டில் பணத்திற்கு கஷ்டமே வராது.

உங்களுடைய வீட்டில் வெள்ளி விளக்கை இதுநாள் வரை ஏற்றி வந்து வழிபாடு செய்து வந்தாலும் சரி, அல்லது புதியதாக வெள்ளி விளக்கை வாங்கி வந்து வீட்டில் வைத்து தீபமேற்றி வழிபாடு செய்தாலும் சரி, அந்த வெள்ளி விளக்கில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு குன்றின்மணிகளைப் போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் வற்றாத செல்வம் ஊற்றெடுக்கும். கடன் பிரச்சினை இருக்காது.

- Advertisement -

குன்றின் மணி நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கின்றது. சிவப்பு கருப்பு வண்ணத்தில் இருக்கக்கூடிய குன்றின் மணியை வாங்கி விளக்கு ஏற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். விளக்கை ஒருமுறை சுத்தம் செய்யும்போது பழைய குன்றின் மணியை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய இரண்டு குன்றின் மணிகளை போட்டு ஏற்றி வர வேண்டும்.

இந்த வெள்ளி விளக்கில் குன்றின்மணி சேர்ந்து நல்லெண்ணெயோடு தீபம் ஒளிரும் போது உங்களுடைய வீட்டில் இருக்கும் இருள் அத்தனையும் விலகும். பிடித்த பீடை விலகும். தரித்திரம் விலகும். லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -