கிளியோபாட்ரா மாதிரி கிளியர் ஸ்கின் வேண்டுமா? குப்பையில் கிடக்கும் இந்த 1 பொருள் போதுமே. நீங்களும் பேர்வழியாக மாறலாம்.

face1
- Advertisement -

எல்லா பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஆசை தான் இது. பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும். முகத்தில் எந்த கரும்புள்ளிகளும் தழும்புகளும் இருக்கக் கூடாது. குறிப்பாக இன்றைய கால சூழ்நிலையில் நிறைய பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகளின் மூலம் அழகு குறைந்து போகின்றது. இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் நிறைய செலவு இல்லாமல், இயற்கையாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்யலாம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் நிரந்தரமாக இயற்கையான அழகை பெறலாம்.

குப்பையில் விளையக்கூடிய குப்பைமேனி மூலிகை தாங்க அந்த பொருள். எல்லார் வீட்டு பக்கத்திலும் இந்த குப்பைமேனி செடி இருக்கும். அந்த செடியிலிருந்து இலைகளை பறித்து கழுவி இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் குப்பைமேனி பொடியாக கிடைக்கின்றது. அதை வாங்கியும் இந்த குறிப்புக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை வேக்சிங் மூலமாகவோ, திரெடிங் மூலமாகவோ அல்லது ரைசர் மூலமாகவோ நீக்கக்கூடிய பழக்கம் உங்களுக்கு இருந்தால், தேவையற்ற முடிகளை நீக்கிய பின்பும் இந்த ஃபேஸ் பேக்கை அந்த இடத்தில் நீங்கள் போடலாம். இல்லை தேவையற்ற முடிகள் அப்படியேதான் முகத்தில் இருக்கிறது, அதை நீக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்பவர்கள், அந்த முடியின் மேலேயே இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

குப்பைமேனி இலையை நீங்கள் பயன்படுத்த போவதாக இருந்தால், குப்பைமேனி இலைகளை பறித்து கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி விழுது போல் அரைத்து, அதில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து பேக் தயார் செய்து கொள்ளுங்கள். குப்பைமேனி பொடி ஆக இருந்தால் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்தும் பேக்காக பயன்படுத்தலாம்.

- Advertisement -

முகத்தில் தேவையற்ற முடிகள் எங்கெல்லாம் உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் இதை நீங்கள் அப்ளை செய்து கொண்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் முகம் முழுவதும் உங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. கருப்புப் புள்ளி, பிம்பிள் வந்த தழும்புகள், சிறிய சிறிய கொப்பளங்கள் உள்ளது, சில பேருக்கு அம்மை வந்த தழும்புகள் எல்லாம் கூட இருக்கும். அது எல்லாம் மறைய வேண்டும் என்றாலும் முகம் முழுவதும் இந்த பேக்கை அப்ளை செய்து 20 லிருந்து 25 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

தினமும் இந்த பேக்கை போட்டு வர வெறும் பத்தே நாட்களில் முகத்தில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். ஆனால் தேவையற்ற முடி உதிர கொஞ்சகாலம் எடுக்கத்தான் செய்யும். ஏனென்றால் இயற்கையான முறையில் சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள் மூன்று மாதத்திற்கு பிறகு உங்களுடைய முகத்தில் இருக்கும் முடி உதிர்வை உங்களால் உணர முடியும். உங்களுடைய ஸ்கின் ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால் அலர்ஜி வரக்கூடிய ஸ்கின் ஆக இருந்தால் கொஞ்சமாக இந்த பேக்கை கழுத்துக்கு கீழே போட்டு டெஸ்ட் செய்து பாருங்கள்.

அரிப்பு இருந்தாலும் அல்லது அந்த இடம் சிவந்து போனாலோ நீங்கள் இந்த பேக்கை பயன்படுத்தக்கூடாது. எந்த அலர்ஜியும் இல்லாதவர்கள் முகம் மட்டுமல்ல, உடம்பில் எல்லா இடங்களிலும் கூட இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம். சரும பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும். அப்புறம் என்னங்க கிளியோபாட்ரா வை விட நீங்க தாங்க அழகு.

- Advertisement -