குழந்தை வரம் தரும் வாராஹி வழிபாடு

varahi
- Advertisement -

திருமணம் ஆகியும் பல வருடங்கள் கடந்து விட்டது. வேண்டாத தெய்வம் இல்லை, போகாத மருத்துவம் இல்லை. ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த பதிவுதான் இது. வாராகியை மனம் உருகி பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்யுங்கள்.

தம்பதியர்களாக இந்த வழிபாட்டை செய்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்கு அடுத்த 10 மாதத்திற்குள் நல்ல செய்தி வந்து சேரும். உங்களுடைய வீட்டில் குட்டி அம்பாளோ அல்லது குட்டி சிவனோ நிச்சயம் தவழ்வார். குழந்தை பாக்கியத்தை கொடுக்கப் போகும் அந்த பரிகாரம் என்ன. பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குழந்தை வரம் தரும் வாராகி வழிபாடு

உக்கிரமாக இருக்கும் வாராகிதாய் குழந்தை உள்ளம் கொண்டவள். அந்த தாயிடம் சென்று, உங்களுக்கு குழந்தை வேண்டும் என்று கேட்டு பாருங்களேன். உடனடியாக குழந்தை பாக்கியத்தை உங்களுக்கு கொடுத்து விடுவாள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வாராகி கோவிலுக்கு போங்க. அந்த வாராஹி அன்னைக்கு வளைகாப்பு செய்து வையுங்கள். உங்களால் முடிந்த வளையலை வாங்கி அந்த கோவில் அர்ச்சகர் இடம் கொடுங்கள்.

அந்த வளையலை வைத்து அம்பாளுக்கு அலங்காரம் செய்து விடுவார்கள். அம்பாளுக்கு ஏழு விதமான கலவை சாதம் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். வளைகாப்பு என்றால் ஒரு பெண்ணுக்கு கலவை சாதம் தானே செய்து கொண்டு போவோம். அதே போல ஏழு விதமான கலவை சாதம் செஞ்சுக்கோங்க. அளவு என்பது உங்களுடைய சௌகரியம். உங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு.

- Advertisement -

எல்லா பிரசாதமும் ஒவ்வொரு கிலோ செய்தால் கூட போதும். அல்லது வசதி இல்லாதவர்கள் அரை கிலோ கூட செய்து கொள்ளுங்கள். (புளி சாதம், எலுமிச்சை பழ சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், நெல்லிக்காய் சாதம்.) இந்த பிரசாதத்தை அம்பாளுக்கு வைத்து நெய்வேத்தியம் செய்து விட்டு, தம்பதி சரீரமாக வாராகி தாயிடம், மனம் உருகி வேண்டுதல் வைக்கவும். இரு கைகளையும் ஏந்தி வாராகியிடம் குழந்தை வரத்தை கேட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அம்மனுக்கு சூட்டப்பட்ட வளையலில் இருந்து கொஞ்சம் மட்டும் வாங்கி, அந்த கோவிலுக்கு வரக்கூடிய பெண்களுக்கு தானம் கொடுத்து விடுங்கள். இரண்டு வளையலை மட்டும் நீங்க போட்டுக்கோங்க. அந்த பிரசாதத்தை எடுத்து கோவிலில் இருக்கும் அனைவருக்கும் தானம் கொடுத்து விடுங்கள். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை ஏதாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று செய்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வாராகி கோவிலில் பஞ்சமி திதி அன்று இந்த வளைகாப்பை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.  நிச்சயம் உங்களுக்கு வராகித்தாய் குழந்தை வரத்தை கொடுத்து விடுவாள். சில பேர் வீட்டு பக்கத்தில் வாராஹி அன்னையின் சன்னிதானம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உக்கிர நரசிம்மர் வழிபாடு

எல்லா அம்மன் சொரூபமும் வராகித்தாயாக பாவிப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். நீங்கள் குழந்தை வரம் வேண்டி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால், மருத்துவரை அணுகினால், அதை எல்லாம் நிறுத்தாமல் கூடவே இந்த ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது, உங்களுக்கு அந்த மருத்துவத்திலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -