குழப்பமான பிரச்சனைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமா? பிரச்சனையை சரி செய்ய செல்லும் போது, இந்த 3 பொருட்களை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

vinayagar-arugampul
- Advertisement -

நாளுக்கு நாள் வாழ்க்கையில் குழப்பங்களும் பிரச்சனைகளும் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றது. பிரச்சனைகளை சரி செய்ய எவ்வளவு போராட்டங்கள். எவ்வளவு முயற்சிகள். ஆனால், கடைசியில் மிஞ்சுவது, தோல்வி. குழப்பம் நிறைந்த பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. மன குழப்பத்தில் இருந்து வெளிப்பட என்ன செய்வது. ஆன்மீகத்தில் இதோ ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண செல்லும்போது இந்த பொருட்களை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக ஒரு தெளிவு பிறக்கும். ஒரு வழி கிடைக்கும். நீண்ட நாள் தேங்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு கூட ஒரு திருப்புமுனை பிறக்கும். வாங்க அந்த எளிமையான பரிகாரம் என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பரிகாரம்:
குழப்பமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் வெளியே செல்கிறீர்கள். முதலில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் ஆகும் போது சூரியனை தரிசனம் செய்ய வேண்டும். சூரியனின் ஆசிர்வாதத்தை முதலில் பெற வேண்டும். பூஜை அறையில் வந்து குலதெய்வத்தையும் விநாயகரை மனதார நினைத்து குழப்பங்கள் தீர வேண்டும். தடைகள் விலக வேண்டும் என்று, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் அருகம்புல், பச்சை கற்பூரம், வில்வ இலை, இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு சின்ன பேப்பரில் இந்த மூன்று பொருட்களையும் எடுத்து வைத்து பொட்டலம் கட்டி உங்களுடைய பாக்கெட்டிலோ பர்ஸிலோ வைத்துக்கொண்டு, உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைக்கும். மன குழப்பம் இருந்தாலும் அது நீங்கி தெளிவு பெறும். உதாரணத்திற்கு சில பேருக்கு கோர்ட், கேஸ் வழக்குகள் இழுபறியாக இருக்கும். சில பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வராது.

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த முடிவை எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பம் சில பேருக்கு இருக்கும். இந்த வேலையில் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமா அல்லது புதிய வேலை தேடலாமா, என்ற குழப்பம் இருக்கும். இப்படி எந்த மன குழப்பம் உங்களிடத்தில் இருந்தாலும் அதை தெளிவு செய்து கொள்ள உங்கள் கையோடு எப்போதும் இந்த 3 பொருளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக முயற்சி செய்றீங்க. பெண் பாக்க போறீங்க, அல்லது மணமகனை பார்க்கப் போறீர்கள் என்றாலும், இந்த மூன்று பொருட்களை கையில் எடுத்துச் செல்லலாம். நல்ல வாழ்க்கை துணை அமையும். விநாயகரை மனதோடு நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் தருணத்திலும் உங்கள் மனம் குழம்பாது. தெளிவாக சில நல்ல முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கும். அந்த முடிவுகள் உங்களுக்கு எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காத அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: இரவு தூங்கும் போது மட்டும் இந்த பொருள்களை தலையனை அடியில் வைத்தால், இந்த உலகத்தையே ஆளும் பேராற்றலையும் செல்வ வளத்தையும் பெறலாம்.

தினமும் இந்த பொருட்களை மாற்ற வேண்டுமா. தினமும் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமா, என்ற சந்தேகம் இருக்கும். தினமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிக்கலான சூழ்நிலையில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு வாரம் முழுவதும் உங்களுக்கு பிரச்சனை தொடரும் என்றால், ஒரு வாரம் முழுவதும் தினமும் இந்த பரிகாரத்தை நீங்கள் பின்பற்றலாம். தவறு கிடையாது. ஆனால் தினமும் பச்சை கற்பூரம், அருகம்புல், வில்வ இலை இந்த மூன்று பொருட்களையும் புதியதாக தான் சுவாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபாடு செய்து விட்டு கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -