குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகாரம்

kulanthai pakkiyam
- Advertisement -

அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். இருப்பினும் ஏதாவது ஒரு செல்வத்தில் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகள் இல்லாத மனிதர் இந்த உலகத்தில் இருக்க முடியாது அல்லவா? எந்த செல்வத்தில் குறைகள் ஏற்பட்டு இருக்கிறதோ அந்த செல்வத்தை பெறுவதற்காக நாம் அதிக அளவில் போராடுவோம். அந்த வகையில் குழந்தை செல்வம் கிடைக்க செய்யக்கூடிய ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய முன்னோர்களான சித்தர்கள் நம் வாழ்வில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்காக சில வழிமுறைகளை பின்பற்றி இருக்கிறார்கள். மருந்தில்லாத நோய்களுக்குக் கூட மருந்தை கண்டறிந்த மாபெரும் மனிதர்களாக திகழ்ந்தவர்கள் தான் சித்தர்கள், அப்படிப்பட்ட சித்தர்களில் முதன்மையானவராக திகழ்பவர் தான் அகத்திய பெருமான். அப்படிப்பட்ட அகத்திய பெருமான் கூறிய குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் மட்டும் தான் இந்த பரிகாரம் பலனளிக்கும். ஒரு துளி அளவு கூட நம்பிக்கை இல்லை என்றால் இந்த பரிகாரத்தை செய்தாலும் எந்த பலனும் கிடைக்காது. நம்பிக்கையுடன் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரம் வெற்றியடையும் என்பதால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அடுத்ததாக இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு சுத்தமான தேனும், வெள்ளி கிண்ணமும் தேவைப்படும். இந்த பரிகாரத்தை குழந்தை இல்லாத தம்பதிகள் இருவரும் இணைந்து தான் செய்ய வேண்டும். பெண் வீட்டிற்கு தூரமாகி முடியும் நாள் அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அன்றைய தினம் விடியற்காலையில் ஆணும் பெண்ணும் விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து விட வேண்டும். மேலும் வீட்டையும் சுத்தம் செய்து விட வேண்டும்.

- Advertisement -

குடும்பத்தலைவி வீட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி எப்பொழுதும் போல் பூஜைகளை செய்ய வேண்டும். பிறகு ஒரு நெய் தீபத்தை ஏற்ற வேண்டும். இப்பொழுது குடும்பத் தலைவன் பூஜை அறைக்கு வந்து அந்த நெய் தீபதிற்கு முன்பாக அமர்ந்து வெள்ளி கிண்ணத்தில் ஐந்தரை கிராம் அளவு மட்டும் சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். பிறகு இந்தக் கிண்ணத்தை தன்னுடைய வலது கையில் வைத்துக் கொண்டு அந்த தேனை பார்த்தவாறு முதலில் விநாயகரை நினைக்க வேண்டும். அடுத்ததாக குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் நினைத்து விட்டு சிவபெருமானையும், அகத்திய பெருமானையும் நினைத்து வழிபட வேண்டும்.

மந்திரம்

- Advertisement -

“ஓம் றீங் அங் வங்”

பிறகு இந்த மந்திரத்தை 1008 முறை உரு ஏற்ற வேண்டும். இப்படி உருவேற்றிய இந்த தேனை தன்னுடைய மனைவியிடம் கொடுத்து முழுமையாக அருந்த சொல்ல வேண்டும். அன்றைய நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் தம்பதிகள் இல்லறத்தில் ஈடுபட வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் ஒவ்வொரு மாதமும் செய்து வர குழந்தையே பிறக்காது என்ற சூழ்நிலை இருந்தாலும் அவர்களுக்கு கருத்தங்கி குழந்தை பிறப்பதற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படும் என்று அகத்தியர் பெருமான் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கூறி வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் குழந்தை செல்வம் என்பது ஏற்படும்.

- Advertisement -