நாளை வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று இதை கொடுத்து வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே உங்கள் இல்லத்தில் குழந்தை சத்தம் கேட்கும்.

amman manjal
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளை கடந்து வர வேண்டியதாக தான் இருக்கிறது. குழந்தை பருவம், பள்ளி பருவம், திருமண பருவம், அடுத்ததாக வருவதுதான் பெற்றோர் என்ற பெரிய பொறுப்பை ஏற்கும் பருவம். பெற்றோர் என்ற ஒரு பொறுப்பு நமக்கு வரவில்லை என்றால் நம்முடைய வாழ்க்கையை நாம் உண்மையாக பெறவில்லை என்று அர்த்தம். இந்த காலத்தில் குழந்தை செல்வம் வேண்டி தவமிருப்போர் பல இருக்கிறார்கள். இதற்காக பல மருத்துவமனைகளை ஏறி இறங்கி பல மருந்துகளை சாப்பிட்டாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அம்மனை எப்படி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய குழந்தை செல்வம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் பரம ஏழைக்கு சமமாக கருதப்படுகிறார்கள். தங்களுடைய வாரிசு என்று ஒரு குழந்தையாவது தங்களுக்கு வேண்டும் என்று வேண்டி தவமிருந்து கோவில் கோவிலாக, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த குழந்தை செல்வம் கிடைப்பதற்காக பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு எளிய பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக நீராடி விட்டு தம்பதிகள் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு முன்பாக முந்தைய நாள் இரவே 50 கிராம் விரலி மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து காலையில் இதை அம்மியில் மைய அரைத்து மஞ்சள் விழுதாக்கி அதை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை அம்மனுக்கு முன்பாக இருக்கும் திரிசூலத்தில் கணவன் மனைவி இருவருமாக சேர்ந்து குத்த வேண்டும்.

அவ்வாறு குத்தும் பொழுது தங்களுடைய கோரிக்கையை கூறி நினைத்துக் கொண்டு குத்த வேண்டும். இந்த மஞ்சளை அம்மனின் தலையிலோ அல்லது பாதத்திலோ அல்லது மார்பிலோ வைக்கும்படி பூஜை செய்யும் நபரிடம் கொடுக்க வேண்டும். பிறகு அம்மனை 11 முறை வலம் வர வேண்டும். பிறகு அம்மனுக்கு முன்பாக மண்டி இட்டு முந்தானியை ஏந்தி நாம் கொண்டு சென்று கொடுத்த மஞ்சள் விழுதில் சிறிது வாங்கி வர வேண்டும். பிறகு கோவிலில் அமர்ந்து விட்டு வருவோம் அல்லவா? அந்த மாதிரி அமரும்பொழுது இந்த மஞ்சள் அம்மனின் பிரசாதமாக நினைத்து கணவனும் மனைவியும் அதை உண்ண வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்து 48 நாட்களும் அந்த மஞ்சளை அம்மனின் பிரசாதமாக நினைத்து உண்டு வந்தால் கண்டிப்பான முறையில் குழந்தை பாக்கியத்தை அந்த அம்மன் அருள்வார். பெண்களுக்கென்று இருக்கும் அந்த ஐந்து நாட்களை மட்டும் தவிர்த்து விட்டு 48 நாட்களை தொடர்ந்து செய்யலாம்.

கணவனும் மனைவியும் காலையில் எதையும் சாப்பிடாமல் இந்த மஞ்சள் பிரசாதத்தை சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு உங்களால் இயன்ற உதவியோ அல்லது வேண்டுதலையோ செய்வதாக நீங்கள் வேண்டிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வெளியே செல்லும் போது குபேரருக்கு வைத்து வழிபட்ட இந்த நாணயத்தை எடுத்துச் செல்லுங்கள் வரும் பொழுது கத்தை கத்தையாக பணத்தை சுமந்து கொண்டு தான் வீட்டிற்கு வருவீர்கள்.

முறையான மருத்துவ ஆலோசனையையும் பெற்று இந்த அம்மனின் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பான முறையில் அந்த அம்மனின் அருளால் இல்லத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -