வெளியே செல்லும் போது குபேரருக்கு வைத்து வழிபட்ட இந்த நாணயத்தை எடுத்துச் செல்லுங்கள் வரும் பொழுது கத்தை கத்தையாக பணத்தை சுமந்து கொண்டு தான் வீட்டிற்கு வருவீர்கள்.

kuberara coins
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் மனிதனுடைய பணத் தேவையானது எப்போதுமே பூர்த்தி அடைவதில்லை. முதலில் ஓரளவிற்கு சம்பாதித்தால் போதும் என யோசிப்பார்கள். அடுத்து வண்டி வாகனம் வாங்க வேண்டும் என யோசிப்பார்கள். அதன் பிறகு வீடு, வாசல், நிலம் என யோசித்து அதற்காக பணத்தை சம்பாதிக்க முனைவார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு தன்னுடைய வாரிசுகளுக்கு இப்படி பணத்தின் தேவையை ஒரு நாளும் குறைத்து கொள்ளமால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது தான் மனித இயல்பு.

இப்படி பணத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என நினைப்பது ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அதற்கான முயற்சியும் உழைப்பையும் செய்வதோடு பண ஈர்ப்பையும் நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் உழைக்கும் பணம் நம்மிடம் தங்கும் வீண் விரயம் ஆகாமல் அது பல மடங்கு பெருகும். அந்தப் பணம் இருப்பினை அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான வழிபாடு குறித்தொரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண ஈர்ப்புக்கு குபேர பூஜை
பண ஈர்ப்பை அதிகரித்துக் கொள்ள நாம் குபேரருக்கு பூஜை செய்ய வேண்டும். அப்போது தான் நம்மிடம் பணம் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனெனில் குபேரர் பணத்தை அருள்பவர் மட்டும் அன்று பணத்தை தக்க வைத்து அதை பல மடங்கு பெருகி கொடுப்பவரும் அவரே. ஆகையால் குபேரரை முறைப்படி வணங்கி வழிபட்டால் பண ஈர்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த வழிபாடு எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் தொடங்கலாம். ஆனால் குபேரருக்கு உகந்த தினம் எனில் அது வியாழக்கிழமை. ஆகையால் வியாழக்கிழமை மாலை இந்த பூஜை தொடங்குங்கள் அல்லது வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓலையில் இந்த பூஜையை செய்யுங்கள் இரண்டுமே நல்ல பலனை கொடுக்கும். இந்த பூஜைக்கு நீங்கள் லட்சுமி குபேரராக இருக்கும் சிலையை வாங்க வேண்டும். இதற்கு உருவப்படத்தை விட சிறியதாக இருக்கும் சிலையை வாங்கிக் கொள்வது நல்லது.

- Advertisement -

ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்த பிறகு அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து குபேரரையும் நன்றாக சுத்தம் செய்த பின்பு அவருக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து தாம்பாளத்தின் நடுவில் வைத்து விடுங்கள். அதன் பிறகு குபேரருக்கு சில்லறை காசுகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தொடங்கும் நாள் தான் வியாழன் வெள்ளியாக இருக்க வேண்டுமே தவிர மற்றபடி இந்த பூஜையை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.

சில்லரை காசுகளை வைத்து வழிபட முடியாதவர்கள் குங்குமத்தை வைத்து அர்ச்சனை செய்யலாம். இந்த அர்ச்சனை செய்யும் போது குபேரருடைய நாமத்தை சொல்லி வணங்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வெளியில் எங்கு சென்றாலும் குபேரருக்கு அர்ச்சனை செய்த நாணயம் அல்லது குங்குமத்தை உங்களுடைய மணி பரிசில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் குங்குமத்தால் அபிஷேகம் செய்திருந்தால் வெளியில் எடுத்துச் சென்ற குங்குமத்தை வீட்டிற்கு வந்தவுடன் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு வேளை நாணயத்தால் அர்ச்சனை செய்திருந்தால் அந்த நாணயத்தை வீட்டிற்கு திரும்பியவுடன் உப்பு தண்ணீரில் இந்த நாணயத்தை போட்டு எடுத்து மறுநாள் அர்ச்சனை செய்ய பயன் படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடுமையான பணத்தட்டுப்பாடு, கடுமையான வீண் விரைய செலவை மூன்றே நாட்களில் குறைக்கும் 1 கைப்பிடி கடுகு!

குபேரருக்கு பூஜை செய்த இந்த நாணயம் உங்களிடம் இருந்தால் போதும். குபேர சம்பத்து உண்டாகி பண ஈர்ப்பு அதிகரித்து பெருமளவு பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். இந்த பதிவில் உள்ள குபேர பூஜை பற்றிய தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் இது போல நீங்களும் வழிபாடு செய்து உங்களுடைய வாழ்க்கை குபேர சம்பத்துடன் வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -