நிலைவாசல் கதவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இதை மட்டும் எழுதி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.

nilaivasal
- Advertisement -

பணக்கஷ்டத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. லட்சாதிபதிக்கும் பணக்கஷ்டம் இருக்கும். கோடீஸ்வரருக்கும் பணம் கஷ்டம் இருக்கும். நமக்கு மட்டும் தான் பண கஷ்டம் இருக்கிறது என்று எப்போதும் புலம்புவதை முதலில் நிறுத்தி விடுங்கள். பண பிரச்சனை தீர வேண்டும் என்றால் அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறீர்களோ, அந்த அளவுக்கான லாபத்தை கடவுள் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பான். இன்னைக்கு கஷ்டப்பட்டால் நாளைக்கு அதற்கான பலன் கிடைக்க வேண்டும் என்று கட்டாயம் எதிர்பார்க்கக் கூடாது. இன்றிலிருந்து கஷ்டப்பட தொடங்கினால் அதற்கான பலனை எப்போது உங்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியும். இன்றிலிருந்து உங்களுடைய முயற்சிகளை தொடங்குங்கள். பணத்தை சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன். எத்தனை இடத்தில் தோல்வி வந்தாலும் அதை கடந்து செல்ல பழகிக் கொள்ளுங்கள்.

இந்த குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு பின் சொல்லக்கூடிய இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்தால் உங்களுடைய வீட்டில் பணம் வசியம் ஆகும். வருமானம் உயரும். நீங்கள் எந்த முயற்சியை எடுத்தாலும் அதில் லாபம் லாபம் லாபம் மட்டும் தான் கிடைக்கும்.

- Advertisement -

லாபம் பெறுக, சந்தோஷம் பெருக நிலை வாசல் கதவில் எழுத வேண்டிய வார்த்தை:
இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் வசம்பு. பேரம் பேசாமல் கடையிலிருந்து ஒரு வசம்பை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நெருப்பில் சுட வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த நெருப்பில் இந்த வசபை சுட்டால் கருகத் தொடங்கும்.

கருப்பான அந்த வசம்பை எடுத்துக்கொண்டு போய் நிலை வாசல் கதவில் வெளிப்பக்கத்தில் லாபம் என்ற வார்த்தையை எழுத வேண்டும். ரொம்பவும் கருப்பாக எல்லோர் கண்களுக்கும் தெரியும் படி இதை எழுத வேண்டாம். அந்த வசம்பு கருப்பு நிற கரி ஆனது, அந்த கதவில் லேசாக ஒட்டி பிடித்தால் போதும். நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் இதை எழுதி வையுங்கள். இந்த லாபம் என்ற வார்த்தை உங்களுக்கு பணத்தை வசியப்படுத்தி கொடுக்கும். கூடவே சேர்த்து குடும்ப சந்தோஷத்தையும் வசியப்படுத்தி கொடுக்கும். நல்லதை வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு.

- Advertisement -

பெருசாக இது அடுத்தவர்களுடைய கண்களுக்கு தெரியாது. வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று இதை துடைத்துவிட்டு புதுசாக எழுதி வர வேண்டும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை நிலை வாசல் கதவுக்கு காண்பியுங்கள் குலதெய்வத்தை நினைத்து.

இதையும் படிக்கலாமே: வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இரண்டு நாளை மட்டும் இப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் இனி கடன் வாங்க வேண்டிய அவசியமே வராது.

இந்த எளிமையான சின்ன பரிகாரம் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமையை வெளியில் விரட்டி அடித்து விட்டு, வருமானத்தை உள்ளே கொண்டு வரும். பிறகு நீங்கள் எந்த ஒரு சின்ன வேலையை செய்தாலும் அதன் மூலம் லாபம் மட்டுமே கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சிறு தொழில் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று இனிமேதான் தொழில் தொடங்க போகின்றோம், இனிமேதான் வேலைக்கு செல்ல போகின்றோம் என்பவர்கள் கூட, இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய முயற்சிகளில் சீக்கிரம் வெற்றி கிடைக்கும். வரக்கூடிய தடைகள் விலகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -