அஷ்டலட்சுமிகளை வீட்டிற்குள் வரவழைக்கும் இந்த கலசத்தினை ஒருமுறை உங்கள் வீட்டில் வைத்தால் போதும். பண மழை நிற்காமல் கொட்டிக்கொண்டே இருக்கும்.

ashta-lakshmi
- Advertisement -

“அரசனும் ஆண்டியாவான், பிச்சைக்காரனும் குபேரன் ஆவான்” இவ்வாறான பழமொழிகளை அனைவரும் கேட்டிருப்போம். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் திடீரென அவர்களிடம் செல்வம் சேர்ந்துவிடும். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றால் அவர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் ஏதேனும் ஒரு வழியில் அவர்களிடம் தாங்காமல் அழிந்துவிடும். எனவே எப்பொழுதும் உங்களிடம் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க இந்த ஒரு கலசத்தினை வீட்டில் வைத்தால் போதும். இந்த கலசத்தினை எவ்வாறு உங்கள் வீட்டில் வைப்பது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வீட்டில் ஐஸ்வர்யத்தை அள்ளித் தருபவள் மகாலட்சுமி தேவி. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்தால் போதும் உங்களுக்கான அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு பல நற்பலன்களை கொண்டுவந்துவிடும். மகாலட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைக்க எப்பொழுதும் வீட்டை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்திருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே மகா லட்சுமி வீட்டிற்குள் நுழைவாள். வீட்டிற்குள் நுழைந்த மகாலட்சுமியை நிரந்தரமாக உங்கள் வீட்டிற்குள் வாசம் செய்ய இந்த ஒரு கலசத்தினை முறையாக செய்திடுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் கலசம் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பித்தளை சொம்பு, செம்பினால் ஆன சொம்பு அல்லது சிறிய மண் பானை இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மண் பானையை சுற்றி முழுவதுமாக மஞ்சளை நீரில் குழைத்து பூசி விடவேண்டும். பிறகு ஒற்றை எண்ணிக்கையில் குங்கும பொட்டு வைத்து விட வேண்டும்.

sembu-sombu

பின்னர் அந்தப் பானைக்குள் நீர் நிரப்பிக் கொண்டு, அதனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமத்தை சேர்க்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியின் அம்சமான பச்சை கற்பூரத்தை தூள் செய்து அவற்றுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு பச்சை அரிசியையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு அதன் நடுவில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, அதன் மீது சிறிது அளவு பச்சை அரிசியை வைத்துவிட்டு இவற்றிற்க்கு மேலே மண் பானையை வைத்து விட வேண்டும்.

one rupee

உங்கள் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்கான எண்ணிக்கையில் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் பெயரை சொல்லி ஒவ்வொரு நாணயமாக பானையில் இருக்கும் தண்ணீரில் போட வேண்டும். இவற்றைப் போட்டு முடித்துவிட்டு மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்து, ‘எங்கள் வாழ்வு சிறப்புடன் அமைய நீங்கள் அருள் புரிந்து எங்கள் வீட்டில் எப்பொழுதும் தனம், தான்யம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்.’ என்று மனதார வேண்டிக் கொண்டு மகாலட்சுமி தேவியே என்று ஒன்பது முறை சொல்லிவிட்டு இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்து விட வேண்டும் வேண்டும்.

இந்த கலசத்தினை மூன்று நாட்கள் பூஜை அறையில் வைத்து காலை மாலை தீப ஆராதனை காட்டி பூஜை செய்ய வேண்டும். மூன்று நாட்கள் கழித்து கலச சொம்பில் இருக்கும் நீரை செடியில் ஊற்றிவிட்டு, 9 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து பீரோவில் வைத்து கொள்ளுங்கள். இந்த கலசத்தினை வருடத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டில் இவ்வாறு செய்தால் போதும் பணமழை உங்கள் வீட்டில் பொழிந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -