முன்னோர்கள் சம்பாதிக்க முடியாத செல்வத்தை நீங்கள் சம்பாதிக்க 48 நாட்கள் இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வந்தால் போதும்.

lakshmi vilakku
- Advertisement -

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு பணம் என்பது உடனே கிடைக்கும், சிலருக்கு தலைமுறைகள் பல தாண்டியும் ஏழ்மை நிலையே நீடிக்கும். இப்படி தொடர்ச்சியாக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்கள் ஏழ்மையை போக்கி வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் பெறவும் இதுவரை அவர்கள் தலைமுறையை சேர்ந்த எவரும் சம்பாதிக்க இயலாத பணத்தை சம்பாதிக்கவும் ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரம் குறித்த தகவலை இந்த ஆன்மிகம் பதிவில் காண்போம் வாருங்கள்.

இந்த பரிகாரமானது மிகவும் எளிமையானது தான். இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் ஒரு பித்தளை தாம்பூலதட்டு, மண் அகல் விளக்கு, காம்புகள் உடைக்காத காய்ந்த மிளகாய், கல்லுப்பு, பச்சரிசி, ஓட்டுடன் கூடிய புளியம்பழம், புங்கை எண்ணெய் மற்றும் மஞ்சள் வண்ண திரி.

- Advertisement -

முதலில் தாம்பூலதட்டை எடுத்துக் கொண்டு அதற்கு மத்தியில் மண் அகல் விளக்கை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி திரியை போட வேண்டும். அதன் பிறகு அதனை சுற்றி காய்ந்த மிளகாய், புளி, உப்பு, பச்சரிசி ஆகியவற்றை வைக்க வேண்டும். இவையெல்லாம் வைத்து முடித்த பிறகு விளக்கை ஏற்ற வேண்டும்.

விளக்கேற்றிய பிறகு உங்கள் குலதெய்வத்தை நினைத்து உங்களக்கு நிறைவான செல்வம் சேர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு “ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ரீம் ஷ்ரீம் குபேராய அஷ்ட லஷ்மி மம க்ரிஹே தனம் புராய புராய நமஹ” என்ற இந்த மந்திரத்தை 48 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

நாம் இந்த விளக்கை பூஜையறையில் தான் நிச்சயமாக ஏற்ற வேண்டும். அதுவும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி விளக்கேற்றுவதன் மூலம் மகாலட்சுமியின் அருளானது பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

இந்த விளக்கை தொடர்ச்சியாக 48 நாட்கள் ஏற்ற வேண்டும் அதுவும் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் இதை ஏற்ற வேண்டும். ஒரு வேலை மாதவிடாய் காரணமாக சில பெண்களால் சில நாட்களில் விளக்கை ஏற்ற முடியவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் அந்த நாட்களில் இந்த விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால் விளக்கானது கண்டிப்பாக 48 நாட்கள் ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

இப்படி இந்த விளக்கேற்றும் சமயத்தில் என்னை மற்றும் திரியைத் தவிர்த்து மற்ற எதையும் நாம் மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவேளை நாம் தாம்பூலதட்டில் வைத்திருக்கும் ஏதாவது ஒன்று பூஞ்சை பிடித்தால் அதை மாற்றலாம். மற்றபடி எதையும் மாற்றவேண்டிய அவசியம் இருக்காது.

இப்படி இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு நிறைவான செல்வம். நிச்சயம் வந்து சேரும். ஒருவேளை உங்களால் அதிகாலையில் எழுந்து விளக்கேற்ற முடியவில்லை என்றால் மாலை வேளையில் அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீங்கள் தொடர்ச்சியாக விளக்கை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே:இந்த தவறை செய்யும் பெண்கள் வீட்டில் மகாலட்சுமி நிலைத்து தங்கவே மாட்டாள்.

இந்த விளக்கானது குறைந்தது தினமும் ஒரு மணி நேரமாவது அணையாமல் இருக்க வேண்டும். ஒருவேளை விளக்கு அணைந்தால் உங்கள் பரிகாரத்தில் தடை இருக்கிறது என்று அர்த்தம். இதை தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -