லட்சாதிபதி யோகம் தரும் பரிகாரம்

cash3
- Advertisement -

தினம் தினம் பணத்திற்காக கஷ்டப்படுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பணப் பிரச்சனை தலைவிரித்து ஆடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், நம்முடைய பண பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு என்று ஒரு சில பரிகாரங்கள் தாந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், இன்று நாம் பார்க்கப் போகும் இந்த பரிகாரம், அன்றாடம் நீங்கள் எதிர்கொள்ளும் பணப்பிரச்சனையை குறைக்கும்.

கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு அந்த கடனிலிருந்து வெளிவர வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்திற்கே வழியில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வருமானம் கிடைக்க வழி வகுக்கும். வேலையில், வருமானத்தில் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை சரி செய்யவும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். நீங்க எதுவுமே செய்ய வேண்டாம்.

- Advertisement -

இந்த இரண்டு பொருளை தூங்கும் போது உங்க பக்கத்தில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். கண் விழித்ததும் இந்த இரண்டு பொருட்களை உங்கள் கைகளால் தொட்டால் போதும். உங்கள் உடம்புக்குள் அத்தனை நேர்மறை ஆற்றல் பெருகும். பணத்தட்டுப்பாடுக்கு உண்டான தீர்வை கொடுக்கும். அதிர்ஷ்டம் உங்கள் அருகில் வந்துவிடும்.

தினம் தினம் வரும் பணக்கஷ்டத்தை சரி செய்ய பரிகாரம்

முதலில் பரிகாரத்திற்கு தேவையான அந்த இரண்டு பொருள் என்ன என்பதை பார்த்து விடுவோம். விரலி மஞ்சள் 6, தாமரைப் பூ விதை 6, விரலி மஞ்சள் சாதாரணமான கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம். தாமரை விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கருப்பு நிறத்தில் மணி போல இருக்கும் அல்லவா. அதிலிருந்து 6 வாங்கிக்கோங்க.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு, படுக்கையறையில் வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இதை நம்ம மீண்டும் பூஜைக்கு பயன்படுத்த போவது இல்லை. ஆகவே இதை படுக்கை அறைக்கு நீங்கள் கொண்டு செல்லலாம். நீங்கள் கண்விழித்த உடன் உங்கள் கை எதையும் தொடக்கூடாது. குறிப்பாக கைபேசியையோ, உங்கள் கை தொடக்கூடாது. முதலில் உங்களுடைய உள்ளங்கை இந்த இரண்டு பொருட்களின் மீது தான் பட வேண்டும்.

ஒரு நிமிடம் வரை இந்த பொருட்களை எல்லாம் அப்படியே இரண்டு உள்ளங்கைகளில் வைத்து மூடிக்கொண்டு, இன்று நல்லதே நடக்க வேண்டும். வருமானம் அமோகமாக இருக்க வேண்டும் என்று, நேர்மையான வார்த்தைகளை சொல்லி பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்து, கையில் இருக்கும் பொருட்களை மீண்டும் அந்த கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு படுக்கையை விட்டு எழுந்து உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம். பரிகாரம் இவ்வளவுதான். 48 நாள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யணும். 48 நாட்களும் அந்த பொருட்களை மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும். 48 நாள் கழித்து அந்த பொருட்களை எல்லாம் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய பொருட்களை வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தை தரும் வாராஹி வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் வாழ்க்கையில் தெரிய தொடங்கி விடும். பணம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு உடனடி தீர்வு கிடைக்கும். காரிய தடையும் விலகும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -