நினைத்த கனவு நிறைவேற உங்கள் கையில் ஒரே 1 எலுமிச்சை பழம் இருந்தாலே போதுமே!

lemon-kula-dheivam
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் மனதில் நிறைவேறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இது நடந்தால் நல்லா இருக்குமே! என்பது போல நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவுகள் நிறைவேற தெய்வத்தின் அருள் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு தேவ கனியாக விளங்கும் தெய்வ கனியான எலுமிச்சை பழம் நம்மிடம் இருந்தாலே போதுமானது. தாந்திரீகம், மாந்திரீகம் போன்ற விஷயங்களுக்கு கூட பயன்படுத்தும் எலுமிச்சை பழம் நல்ல தேவதைகளை ஈர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நினைத்தது நிறைவேறுவதற்கு எலுமிச்சை பழத்தை வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

lemon

நினைத்தது நிறைவேற மட்டுமல்ல, ஒரு துறையில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றாலும் தெய்வத்தின் அருளைப் பெற இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தில் குலதெய்வத்தையும், நல்ல தேவதைகளையும் வசியம் செய்யும் சக்தி உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஆன்மீக மற்றும் தாந்திரீக விஷயங்களுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகின்றனர்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாராளமாக செய்து பார்க்கலாம். ஒரே ஒரு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சை பழத்தை உள்ளங்கையில் வைத்துக் மூடி கொண்டு மூன்று முறை, ‘ஓம் குலதேவதா நாம!’ என்று உச்சரிக்க வேண்டும். இப்படி நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்களுடைய குல தெய்வம் எலுமிச்சை பழத்தில் வந்துவிடும். அதன் பின்னர் கீழ் வரும் மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.

mantra-signature

மந்திரம்:
ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா!

- Advertisement -

மந்திரத்தை உச்சரித்த பின் எலுமிச்சை பழத்தில் மூன்று முறை லேசாக உங்களுடைய மூச்சுக் காற்று படும்படி ஊதி விட வேண்டும். இப்படி செய்வதால் அனைத்து தெய்வங்களின் அருளும் அந்த எலுமிச்சை பழத்தில் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய வேண்டுதல்களை நீங்கள் வைக்கும் பொழுது நிச்சயம் அந்த வேண்டுதல்கள் உடனடியாக பலிக்கும். பெரும்பாலும் மாந்திரீகர்கள் எப்பொழுதும் கையில் எலுமிச்சை பழம் வைத்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

lemon1

இது போல் தினமும் ஒரு பழம் என்று 21 நாட்களுக்கு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது அப்படியே பலிக்கும். நீங்கள் நினைக்கும் விஷயம் நல்ல விஷயமாக இருப்பது முக்கியமான ஒரு குறிப்பாகும். தீய எண்ணங்களும், மற்றவர்களை அழிக்கும் நோக்கத்துடனும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதனுடைய பின்விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். உண்மையான மற்றும் நேர்மையான வேண்டுதல்கள் மட்டுமே பலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

elumichai lemon

21 நாட்களுக்கு ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியமும் இல்லை. பூஜை அறையில் வைத்து விட்டு இரவில் அதனை ஜூஸ் போட்டு குடித்து விடலாம். இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. மறுநாள் மீண்டும் புதிய எழுமிச்சை பழத்தை வைத்து இதே போல மந்திரத்தை உச்சரியுங்கள். நீங்கள் குலதெய்வத்தையும், மற்ற தேவதைகளையும் அழைக்கும் பொழுது நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்களும் விரைவாக பலிக்கும்.

இதையும் படிக்கலாமே
எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும். உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -