கார்மேகம் போன்ற அடர்ந்த கருங் கூந்தலை பெற இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து தேய்த்து வந்தாலே போதும். முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர ஒரே எளிய வழி இது தான்.

hair lady oil
- Advertisement -

முடி தொடர்பான பிரச்சனைகள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு பெரிய பட்டியல் அளவுக்கு நீளும். ஒரு சிலருக்கு இளநரை இருக்கும் பொடுகு முடி உதிர்வு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடி வளராமல் இருப்பது ஒரு சிலருக்கு முடி நன்றாக வளர்ந்து இருக்கும் ஆனால் அடர்த்தியாக இருக்காது முடிகளில் வறட்சித் தன்மையுடன் இருப்பதால் முடி வெடித்து காணப்படுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய ஒரு எளிய வழியை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர எண்ணெய்
இந்த முறையை நாம் புதிதாக கண்டுப்பிடித்து கிடையாது நம் பாட்டி காலத்தில் இருந்த இருந்த ஒரு முறையை தான் இப்போது அதில் கொஞ்சம் பொருட்களை சேர்த்து நாம் தயாரிக்கப் போகிறோம். நம் பாட்டி காலத்தில் இருந்தே முடி வளர அவர்கள் கையாண்ட ஒரு அற்புதமான மருந்து எனில் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது தான்.

- Advertisement -

இந்த நல்லெண்ணெய் நம் உடல் சூட்டை குறைப்பதுடன் தலையில் உள்ள உஷ்ணத்தையும் குறைத்து முடிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி அதிகமாக வளரவும், அதே நேரத்தில் இளநரையை தடுத்து முடி கருப்பாக வளர வைக்கவும் இந்த எண்ணையை நாம் பயன்படுத்தி வந்திருக்கிறார் கள். இப்போது அந்த எண்ணெயில் நாம் இந்த இரண்டு பொருட்களை சேர்க்க வேண்டும் ஒன்று துளசி மற்றொன்று வேம்பாலட்டை.

இந்த எண்ணெய் தயாரிக்க 200 கிராம் சுத்தமான சைக்கிள் ஆட்டிய நல்லெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடாகும் இந்த நேரத்தில் ஒரு கைப்பிடி துளசி இலையை சேர்த்துக் கொள்ளுங்கள். துளசி இலையை அலச வேண்டாம். ஈரத்துடன் எண்ணெயில் போடக் கூடாது. அடுத்ததாக 10 கிராம் வேம்பாலயை பட்டை வாங்கி அதையும் இதில் சேர்த்து லேசாக எண்ணெய்யை சூடு படுத்தினால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த எண்ணெயை அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரவு முழுவதும் இது அப்படியே இருந்தால் கூட நல்லது தான் அல்லது உடனடியாக வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாவது அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் முடியில் இந்த எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு அதில் கொஞ்சம் இயற்கையான ஆலிவேரா ஜெல்லை கலந்து நன்றாக முடியும் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விடுங்கள்.

இதை தேய்க்கும் போது முடியில் ஒவ்வொரு பாகமாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடுங்கள். இதுவே ஒரு மசாஜ் செய்தது போல இருக்கும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தலையை கசக்கி விடுங்கள். இந்த எண்ணெய் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி குளித்தால் கூட போதும். உங்கள் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.

இதையும் படிக்காலமே: என்றும் இளமையுடன் இருப்பதற்கு பாதாமை வைத்து இப்படி கிரீம் செய்து முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். பார்ப்பவர்கள் அனைவரும் கேட்கும் அளவிற்கு அழகுடனும், மெருகுடனும் மாறிவிடுவீர்கள்.

இந்த அழகு குறிப்பு பதிவிலுள்ள முடி பிரச்சனைக்கு தேவையான எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்தாலே ஒரு வாரம் வரை நன்றாகத் தான் இருக்கும். இதை அவ்வப்போது செய்து கொள்வதே சிறந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு தேவையற்ற கெமிக்கல்களை பயன்படுத்தி கேடு விளைவித்துக் கொள்ளாமல் இது போல இயற்கையான முறையில் முடியை பராமரித்து கொள்ளுங்கள்.

- Advertisement -