வீட்டில், மனைவி பேச்சுக்கு இனி மறுபேச்சு கிடையாது. கணவர், மனைவியின் சொல் பேச்சு கேட்டு நடக்க இதை மட்டும் செய்து பாருங்கள்!

maailai
- Advertisement -

சில வீடுகளில் இருக்கும் கணவன்மார்கள் ஒருபோதும் மனைவியின் பேச்சைக் கேட்பதே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனையில் மனைவி முன்வந்து தன்னுடைய கருத்துக்களை சொல்லி ‘இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது’ என்று சொன்னால் கூட அந்த மனைவியின் பேச்சுக்கு மரியாதை கிடைப்பது கிடையாது. காரணம் சில ஆண்களின் மனதிற்குள் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்ற நினைப்பு அதிகமாக இருக்கும். பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா.

fight2

நாம் ஒரு செயலை செய்தோம் என்றால் அந்த செயலின் மூலம் பின்னால் வரக்கூடிய பிரச்சினைகளை, முன்கூட்டியே அறியும் திறமை பெண்களிடத்தில் இயற்கையாகவே உள்ளது. இதனால் தான் அந்த காலத்தில் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லி வைத்தார்கள். இதையே காலப்போக்கில் பெண்களுக்கு புத்தியே இல்லை என்பது போல் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

சரி, போகட்டும். பெண்களை அறிவு இல்லாதவர்கள் புத்திக்கூர்மை இல்லாதவர்கள், பெண்களுக்கு என்ன தெரியும் என்று சிந்திக்கும் ஆண்கள் இருக்கும் இதே பூமியில் தான், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண்களும் இருக்கிறார்கள், என்ற மன திருப்தியுடன் பதிவிற்குள் செல்வோம்.

Maavilai thoranam

உங்களுடைய வீட்டில் மனைவி சொல்லக்கூடிய நல்லதை கணவர் கேட்காமல் நடந்து கொண்டால், நீங்கள் இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலனடையலாம். ஒருவேளை வீட்டில் மனைவி சரியில்லை என்றாலும் கணவன்மார்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருள். மாயிலை, சுலபமாக எல்லா இடத்திலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் கழுவி ஈரம் உலர காய வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு நீல நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாயையில் மனைவியின் கையால் ‘கணவர் என்னுடைய பேச்சை கேட்க வேண்டும்’ என்று எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின் மாஇலையை சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூலால் கட்டி ஒரு டப்பாவில் போட்டு, அந்த டப்பாவில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு, மூடி அப்படியே எடுத்து வைத்துவிடுங்கள். இதை பூஜை அறையிலேயே அமர்ந்து செய்யலாம். ஒருவேளை கணவர் இந்த பரிகாரத்தை செய்தால் ‘மனைவி என் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்’ என்று எழுதிக் கொள்ளுங்கள்.

maailai1

இந்த டப்பாவை யார் கண்ணுக்கும் தெரியாமல் அலமாரியின் மேல் பக்கத்திலோ அல்லது வேறு ஏதாவது மறைவான இடத்திலோ எடுத்து வைத்து விடலாம். உங்களுடைய கணவர் உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று வெறுமனே இதில் எழுதினால் மட்டும் போதாது. மனதார நம்பி, இதை எழுதுவதன் மூலம், இந்த விஷயம் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உங்கள் மனதிற்குள் வரவேண்டும்.

pachai-karpooram1

இப்படி செய்தால் நிச்சயமாக கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியும். தவறான பாதையில் செல்லும் கணவராக இருந்தால் கூட, அவரை திருத்தி சரியான பாதையில் மனைவியால் வழி நடத்திச் செல்ல முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. சரி இந்த பரிகாரம் இதற்கு மட்டும் தானா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது.

pachai-karpooram

உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரி பிரச்சனை, மனகஷ்டம் எதுவாக இருந்தாலும், மாஇலையில் எழுதி இப்படி வைத்துவிட்டால் உங்களுடைய கோரிக்கை சில நாட்களிலேயே நிறைவேற தொடங்கும். மாஇலைக்கு அப்படி ஒரு அபரிமிதமான சக்தி உண்டு. நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி மாவிலைக்கு இருக்கின்றது. நல்லதுக்கு மட்டுமே இந்த பரிகாரம் பயன்படும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டில் இந்த சுலபமான தாந்திரீக பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -