எப்போதெல்லாம் மாவிளக்கு போட வேண்டும்? எப்படி போட வேண்டும்? மாவிளக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

maavilakku-lakshmi
- Advertisement -

பொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் ஆடி மாதம் மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். ஆடி மாதம் மாவிளக்கு போடுவதால் மழை பொழியும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அத்தகைய விசேஷம் மிக்க மாவிளக்கு எப்போதெல்லாம் எந்த தெய்வத்திற்கு போட வேண்டும்? எப்படி போட வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

mavilaku

ஆடி மாதத்தில் மஹாலக்ஷ்மியை வேண்டி வரலட்சுமி நோன்பு இருப்பவர்கள் மாவிளக்கு போடுவார்கள். விரதம் இருக்கும் சக்தி வாய்ந்த அந்த நாளில் மாவிளக்கு போடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு மிகவும் விசேஷமான விளக்காக மாவிளக்கு கருதப்படுகிறது. பக்தர்கள் ஏதாவது தவறு செய்யும் பொழுது அம்மனிடம் மன்னிப்பு கேட்பதற்கு மாவிளக்கு போட்டு மனதார மன்னிப்பு கேட்பார்கள். உடனே அம்மனும் மனமிறங்கி மன்னித்து அருள்வதாக புராண வரலாறுகள் உண்டு.

- Advertisement -

அது போல குலதெய்வம் கும்பிடுபவர்கள் மாவிளக்கு போடுவார்கள். மாவிளக்கு போடுவதால் குலதெய்வம் இறங்கி வந்து அருள் புரிவதாக நம்பப்பட்டு வருகிறது. அதனால் தான் குலதெய்வம் கோவிலுக்கு செல்பவர்கள் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவது காலம் காலமாக செய்யும் ஒரு நடைமுறை வழக்கம் ஆகும்.

mavilakku

வரலட்சுமி நோன்பு அன்று தான் மாவிளக்கு போட வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சுகபோக வாழ்வு அமையும். ஒரு சிலருக்கு மாவிளக்கு எப்படி செய்வது என்பது தெரியாது. அவர்களுக்காக மாவிளக்கு எப்படி செய்வது? என்பதை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

மாவிளக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பச்சரிசி – கால் கிலோ, வெல்லம் – 100 கிராம், ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன், சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன், பச்சை கற்பூரம் – சிறிதளவு.

mavilaku

மாவிளக்கு செய்யும் முறை:
பச்சரிசி மாவு வைத்திருப்பவர்கள் சுலபமாக செய்யலாம். இல்லாதவர்கள் பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை நன்கு சலித்து எடுக்க வேண்டும். கடைசியாக வரும் குருணையை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

rice-flour

பச்சரிசி மாவுடன் வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம். இவற்றைக் கட்டாயம் போட வேண்டும் என்பதில்லை. இதில் உங்களிடம் எது இருக்கிறதோ அதைப் போட்டால் போதுமானது. இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும். அதனால் தான் இதை சேர்க்கிறார்கள்.

vellam

எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டையாக இல்லாமல் ஒரு உருளையாக தட்டி வைத்துக் கொண்டால் தீபம் செய்வதற்கு வசதியாக இருக்கும். உருளை வடிவத்தில் கொண்டு வந்து பின் இரண்டாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

maavilakku

எப்போதும் மாவிளக்கு ஒற்றையில் போடக்கூடாது. இரண்டு தீபங்கள் அல்லது நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் இதை நிவேதனமாக சாப்பிட இருப்பதால் வேறு எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது.

maavilakku1

தனித்தனியாக இப்போது தீப வடிவில் மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள். சந்தான குங்குமம் இட்டு, அதில் நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றுபவர்கள் அடியில் ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
பூஜை செய்யும் கற்பூரத்தில் இவ்வளவு விஷயம் செய்ய முடியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -