பீரோவில் மாதுளை குச்சியை இப்படி வைத்தால் போதும். மாதுளை முத்துக்கள் போல, பணம் வீட்டில் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கிவிடும்.

cash2
- Advertisement -

மாதுளை பழம் என்பது மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கு உரிய ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் மாதுளை மரம் வைத்து வளர்த்தால் அது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். மாதுளைப் பழத்தை அப்படியே உரித்து எடுத்தால் உள்ளே இருக்கும் முத்துக்கள் எப்படி கொட்டுகிறதோ அதே போல நம்முடைய வீட்டிலும் செல்வ மழை பொழிய வேண்டும். மனதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யலாம். மனமகிழ்ச்சியை செல்வ வளத்தை கொடுக்கும் தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் வறுமை வருவதற்கு முதல் காரணம் நம் வீட்டில் தங்கியிருக்கும் தரித்திரம், பீடை, எதிர்மறை ஆற்றல் தான். நல்லது நடக்க கூடிய இடத்தில் சில கெட்டது நடக்கத்தான் செய்யும். அதே சமயம் சில கெடுதல் நமக்கு வருகிறது என்றால், அதன் பின்னால் ஏதோ ஒரு பெரிய நல்லது காத்துக் கொண்டிருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. சந்தோஷம் வரும் போது அதை மனநிறைவோடு எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, அதேபோல கஷ்டம் வரும் போதும் அதை எதிர்கொள்ள கூடிய சக்தியை கொண்டு வர வேண்டும். இது முதல் விஷயம். எதையும் கண்டு துவண்டு போகாதீர்கள்.

- Advertisement -

எதையுமே எதிர்த்துப் போராடினால் நமக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். சரி, பரிகாரத்தை பார்க்கலாம். மாதுளை மரத்தில் இருக்கும் குச்சி ஒரு சிறிய துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். கரும்புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் இந்த மாதுளை குச்சியையும், எலுமிச்சம் பழத்தையும் ஒன்றாக வைத்துக் கொண்டு, பூஜை அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

எலுமிச்சம் பழம் என்பது ராஜகணி அல்லவா. இதை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். கூடவே பணக் கஷ்டத்தை தீர்க்கும் மாதுளை குச்சி உள்ளது. இந்த இரண்டு பொருட்களையும் கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியை மனதார வேண்டி உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை தீர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். வறுமை நீங்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொண்டாலும் சரி, அல்லது மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கொண்டாலும் சரி, இதை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த முடிச்சு அப்படியே பீரோவுக்குள் இருக்கட்டும். வாரத்திற்கு ஒரு நாள் எலுமிச்சம்பழம் நன்றாக வாடிய பின்பு அந்த பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.(மாதுளை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த குச்சு 6 மாதங்கள் ஆனாலும் எதுவும் ஆகாது. காய்ந்தாலும் அதே குச்சியை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

மீண்டும் புதிய எலுமிச்சம் பழத்தை வாங்கி பீரோவில் வைத்திருக்கும் அதே மாதுளை குச்சியை எடுத்து, மீண்டும் இந்த இரண்டு பொருட்களையும் கையில் வைத்து பூஜை அறையில் அமர்ந்து, மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, மீண்டும் இந்த இரண்டு பொருட்களையும் பீரோவில் வைக்க வேண்டும்.

வாரத்தில் ஒருநாள் மட்டும் பீரோவில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து மாற்றப் போகிறார்கள். மூன்று வாரங்கள் இப்படி இந்த இரண்டு பொருட்களையும் பீரோவில் வைத்து வர, நிச்சயமாக வீட்டில் இருக்கும் பண கஷ்டம் தீர நிறைய வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் தாந்திரிக ரீதியான இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -