கையில் காசே இல்லை என்பவர்கள் கூட சில நாட்களில் பெரிய பணக்காரர் ஆகலாம். காந்தம் போல பணத்தை ஈர்க்கும் காந்த பரிகாரம்.

coins1
- Advertisement -

கையில் காசே இல்லை என்றால் எப்படி பணக்காரராக முடியும். கஷ்டப்பட்டு உழைத்தால் காசு நம்மிடம் இஷ்டப்பட்டு வரப்போகிறது. அவ்வளவுதான். உழைக்காமல் காசு பணம் நம் கையில் வர வேண்டும் என்று என்றைக்குமே நினைக்க கூடாது. உழைக்காமல் நமக்கு வரக்கூடிய காசு பணம் நம் கையில் நிரந்தரமாகவும் தாங்காது. பெரும்பாலும் இது நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் நிறைய காசு பணம் நம் கையைத் தேடி வரும் சமயத்தில் நம்முடைய கண்கள் குருடாகிவிடும். என்ன செய்கிறோம் என்பதே சில பேருக்கு தெரியாது. தலைகால் புரியாது. நிறைய பணம் வந்தாலும் நிதானமாக நம்முடைய கால்கள் தரையில் நிற்க வேண்டும். மனிதத் தன்மையை எக்காரணத்தைக் கொண்டும் நாம் இழந்து விடக்கூடாது. சரி, இப்போது பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சமீப காலமாக மறந்து விட்டோம். அவ்வளவுதான். ஏனென்றால் இப்போது நாம் யாருமே மல்லிகை கடைக்கு போவதில்லை அல்லவா. கூடுமானவரை ஆன்லைனில் ஷாப்பிங். அப்படி வெளியே போவதாக இருந்தால் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், பெரிய பெரிய ஷாப்பிங் மால்க்கு தான் செல்கின்றோம். பக்கத்தில் இருக்கும் நாடார்கடை, செட்டியார் கடை, அண்ணாச்சி கடை, பெட்டி கடைக்கு செல்வதே கிடையாது. அவர்களெல்லாம் நம்மை நம்பி தானே கடை வைத்திருக்கிறார்கள். அவர்களிடமும் கொஞ்சம் வியாபாரம் செய்யுங்கள். தவறு கிடையாது.

- Advertisement -

இப்படி சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கடையில், ஒரு காந்தத்தை வைத்து அந்த காந்தத்தை சுற்றிலும் நாணயங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். இது அழகிற்காக கூட செய்யக்கூடியது என்று சொல்லலாம். ஒரு காந்தத்தில் நிறைய நாணயங்களை ஒட்டி அப்படியே தொங்க விடும்போது, பார்ப்பதற்கு அது அழகாகத் தான் இருக்கும். ஆனால் பாருங்கள் கடைகளில் வியாபாரமும் பெரிய அளவில் நடக்கும். இந்த காந்தம் சில்லறை காசுகளையும் நோட்டுகளையும் அப்படியே தன் வசம் ஈர்த்துக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்முடைய வீட்டிலும் இப்படி காந்தத்தில் நாணயங்களை ஒட்ட வைத்து தொங்க விட வேண்டுமா. அப்படி செய்தால் தவறு கிடையாது. ஆனால் எல்லோராலும் இந்த விஷயத்தை பின்பற்ற முடியாது அல்லவா. சிறிய துண்டு காந்தத்தை உங்களுடைய பீரோவில் எங்காவது ஒரு இடத்தில் ஒட்டி வைத்து விடுங்கள். பீரோவுக்கு உள்பக்கம் பணம் வைக்கும் பெட்டியில். பெரும்பாலும் இப்போது நாம் எல்லோர் வீட்டிலும் இரும்பில் தானே பீரோ வைத்திருக்கின்றோம். அப்படி பணம் வைக்கக்கூடிய இடத்தில் ஒரு காந்தத்தை வைத்து பாருங்கள். பணம் உங்களிடம் நிறைய சேர தொடங்கும்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் இந்த சிறிய காந்தத்தில் நான்கைந்து நாணயங்களை ஒட்டி பீரோவுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாகத்தான் அமையும். காந்தம் அந்த நாணயங்களை எப்படி ஈர்த்துக் கொள்கிறதோ, அதேபோல உங்களிடம் பணம் நிரந்தரமாக தங்கிவிடும். இது ஒரு சின்ன பரிகாரம் தான். நம்பிக்கையில் செய்யக்கூடிய தாந்திரீகங்களில் இதுவும் ஒன்று.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லது நடந்தால் பரிகாரத்தை தொடரலாம். இதில் நஷ்டம் ஏற்பட எதுவும் இல்லை. பத்து ரூபாய்க்கு கூட கடைகளில் இப்போது காந்தம் விற்கின்றது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது தானே நடக்கும். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத உள்ளம் என்றுமே சந்தோஷமாகத்தான் இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -