ஆயுள் அதிகரிக்க சிவ மந்திரம்

sivan4
- Advertisement -

எமன் வாயில் நுழையும் தருவாயில் கூட, ஈசன் நம்மை பத்திரமாக மீட்டு எடுத்து விடுவார். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி சிவ வழிபாடு செய்தால். ஆமாங்க, நிறைய பேருக்கு தீராத நோய்நொடி பிரச்சனை இருக்கிறது. சிறு வயதிலேயே ஜாதகத்தில் கண்டம். உயிர் போகும் ஆபத்து இருக்கு, என்றாலும் அவர்களுடைய ஆயுளை காப்பாற்றிக் கொள்ள செய்ய வேண்டிய ஒரு சிவன் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

16 வயது உடைய மார்க்கண்டேயர், தன்னுடைய உயிர் பிரியும் சமயத்தில் சிவபெருமானை கட்டிக்கொண்ட அந்த சமயம், எமதர்மன் பாசக்கயிறு வீசும் போது சிவபெருமான் அவதாரம் எடுத்து எமதர்மனை காலால் எட்டி உதைத்த கதை நாம் எல்லோரும் அறிந்ததே. ஈசனை முழுசாக நம்பி ஈசனின் பாதத்தை சரண் அடைந்து விட்டால், மரணம் நம்மை நெருங்காது.

- Advertisement -

எதிர்பாராமல் சிறுவயதிலேயே நம்முடைய விதியை முடிக்க, பிரம்மா தாறுமாறாக தலை விதியை எழுதி இருந்தால் ஏதேனும் கண்டம் இருந்தால் அதை தாண்டி செல்ல இந்த மந்திரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம்.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஈசனின் படத்திற்கு முன்பு ஒரு டம்ளர் பால் நெய்வேதியமாக வைக்க வேண்டும். அந்த பாலில் நாட்டு சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து நெய்வேதியமாக வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதன் பிறகு பூஜையறையில் அமர்ந்து பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை படியுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு 2 வரிகள் முடியும்போது ஈசனை, இரு கை கூப்பி தலை வணங்கி நமஸ்காரம் செய்து வழிபாடு செய்யவும். உங்களால் முடியும் என்றால் ஒவ்வொரு 2 வரி முடியும் சமயத்திலும், ஈசனை தரையில் விழுந்து நமஸ்காரம் செய்து இந்த மந்திரத்தை படிப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது.

மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு ஈசனுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொண்டு அந்த பாலை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குடித்து விடலாம். இந்த மந்திரத்தை படிப்பவர்களுக்கு எம பயம் இருக்கவே இருக்காது. ஜாதக கட்டத்திலேயே சிறு வயதில் கண்டம் இருக்கிறது, சிறுவயதில் இந்த பிள்ளை இறந்து விடுவான் என்று சொன்னால் கூட, அவன் தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி ஈசனை வழிபாடு செய்தால், எமன் வீசும் பாச கயிறில் இருந்து தப்பிக்கலாம். அப்படிப்பட்ட விசேஷம் கொண்ட மந்திரம் தான் இது.

- Advertisement -

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் தமிழில்:

ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

காலகண்டம் காலமூர்த்திம் காலாக்னிம் காலநாசனம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

அனந்தம் அவ்வயம் சாந்தம் அக்ஷாலாதரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்யபத தாயிநம் .
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

தேவ தேவம் ஜகந்நாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

ஸ்வர்க் காபவர்க தாதாரம் ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிணம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

கங்காதரம் சசிதரம் சங்கரம் சூலபாணி நம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் நாகாபரணபூஷிதம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வநீ ப்ராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிரூபத்ரவம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

த்ரயக்ஷம் சதுர்புஜம் சாந்தம் ஜடாமகுடம் தாரிணம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தார மீச்வரம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; கரிஷ்யதி!

வ்யோமகேசம் விருபாக்ஷம் சந்தார்த்த க்ருத சேகரம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு; ‘கரிஷ்யதி!

கல்பாயுர் தேஹிமே புண்யம் யாவதாயு; அரோகதாம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி!

சிவேசா நம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்.
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி!

இதையும் படிக்கலாமே: பாதுகாப்பு கவசமாகும் வாராகி மாலை

மந்திரத்தை தினமும் படியுங்கள். அந்த ஈசனின் அருளைப் பெறுங்கள். இன்னல் இல்லாத வாழ்க்கையை வாழுங்கள் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -