மகா பெரியவா ஆசிர்வாதங்களை பெற மந்திரம்

periyava
- Advertisement -

தன்னுடைய நலம், தன்னுடைய சுகம் என்று பார்க்காமல் கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் இறைப்பணியை செய்து கொண்டு, இறைவனுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்த மகான் தான் இந்த மகா பெரியவா. 8-1-1994 ஆம் ஆண்டு இவருடைய உயிர் இந்த உலகத்தில் இருந்து பிரிந்தது. அவர் உயிர் பிரிந்த அந்த நாள் அனுஷம் நட்சத்திரம். அவர் பிறந்ததும் அனுஷம் நட்சத்திரம் தான்.

இதில் இன்னும் என்ன சிறப்பு தெரியுமா. என்று 8-1-2024 ஆம் தேதி அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. இன்று அவர் இறந்த நாளிலேயே அனுஷ நட்சத்திரம் சேர்ந்து வந்திருப்பதால் இரட்டிப்பு பலன் உண்டு. இந்த நாளை நாம் தவறு விடலாமா. மகா பெரியவா இப்போது இந்த லோகத்தில் இல்லை. ஆனால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மனதில் குருவாக, மகா பெரியவா என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

- Advertisement -

மகா பெரியவா மறைந்த இந்த நாளை நாம் எப்படி அனுஷ்டிப்பது. ஏழை பணக்காரன் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும், மனித உயிரினங்களாக நேசித்து, தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு, எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பரிகாரங்களை சொல்லி வழி நடத்திய இந்த மகா பெரியவா முக்தி அடைந்த தினத்தில் அவருக்கு நாம் ஒரு சின்ன நன்றி கடனையாவது செலுத்த வேண்டும் அல்லவா. அதற்காக பதிவுதான் இது.

இன்றைய தினம் மகா பெரியவாவை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுவோம். மகா பெரியவாவை நம்முடைய மனதில் திரும்பவும் நினைவு கூறுவோம். அந்த மகானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுவோம்.

- Advertisement -

அனுஷ நட்சத்திரத்தில் மகா பெரியவா மந்திரம்

இன்று இரவு தூங்க செல்வதற்குள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் போதும். விளக்கு ஏற்ற வேண்டாம் சாமி கும்பிட வேண்டாம். இன்று இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். மகா பெரியவா அவர்களை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த மகானைப் போல நம்மால் வாழ முடியாது. ஒரு மனிதனைப் போல வாழவும், சுயநலம் இல்லாத மனதை கொடு என்று, மகா பெரியவாவை மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். மகா பெரியவா பாதங்கள் உங்கள் கண் முன்னே இருப்பதாக மானசீகமாக நினைத்துக் கொள்ளுங்கள். மஹா பெரியவா திருவடிகளை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு வணங்குவது போல நினைத்துக் கொள்ளுங்கள். இதே தருணத்தில் ‘மகா பெரியவா திருவடிகளே சரணம்’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த பூலோகத்தில் மனிதர்களாக பிறந்த மகானாக வாழ்ந்த குருமார்களை உங்களுக்கு குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தால், இன்றிலிருந்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, மகா பெரியவா பாதங்களில் தொட்டு வணங்கி ஆசீர்வாதத்தை பெற்று, மகா பெரியவா அவர்களையே உங்களுடைய குருவாக ஏற்றுக்கொண்டு இன்று முதல் வழிபாடு செய்ய தொடங்குங்கள். அந்த மகனின் நெறிமுறைகளை தினமும் நீங்களும் கடைபிடித்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் தீர கல் உப்பு பரிகாரம்

அந்த மகனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அந்த மகனின் தரிசனத்தை நீங்கள் பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும். உங்கள் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் வெளியேறும். சுயநலம் இல்லாத, பிறர் மீது அன்பு காட்டக்கூடிய நல்ல மனிதர்களாக நீங்கள் வாழ்வதற்கு உண்டான சந்தர்ப்பத்தை அந்த மகா பெரியவா ஏற்படுத்தி தருவார் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -