சுக்கிரனுடைய பரிபூரண அருளை பெற்று நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள வீட்டிற்கு வருவோருக்கு இந்த பொருளை தானமாக தாருங்கள். பண வரவிற்கு வட இந்தியர்கள் பயன்படுத்தும் சூட்சும பரிகாரம்.

- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க தீபம் ஏற்றுவது வாசனை பொருள்களால் வீட்டை மணமாக வைத்திருப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது, என பல வழிகள் உண்டு. இத்துடன் சுக்கிரனின் அருளையும் சேர்த்து பெற இந்தப் பொருளை தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் அருள் பரிபூரணமாக கிடைக்க:
இந்த பரிகாரத்திற்கு நாம் எந்த பொருளையும் வாங்கி எந்த பூஜையும் செய்யப் போவதில்லை அதற்கு மாறாக நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட இந்தியர்கள் பயன்படுத்தும் இந்த சூட்சம பரிகார முறையை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் எனில் தாயாரின் அனுகிரகம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல சுக்கிரனோட அருளும், குபேரருடைய அருளும் நமக்கு கிடைக்க வேண்டும். இப்பொழுது நாம் செய்யும் இந்த தானங்களால் இவை அனைத்தும் நமக்கு கிடைப்பதோடு, இவர்கள் நிரந்தரமாகவே நம்முடன் இருந்து அருள் புரிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நம்முடைய கலாச்சாரத்தில் வீட்டிற்கு வருபவருக்கு மஞ்சள் குங்குமம் ரவிக்கை துண்டு போன்றவற்றை கொடுப்பது வழக்கம். இத்துடன் சேர்த்து ஏதாவது ஒரு இனிப்பு குறிப்பாக லட்டு, பாலினால் செய்த இனிப்பு பலகாரங்களை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அதுவும் சுமங்கலி பெண்களுக்கு இந்த பொருள்களை எல்லாம் கொடுப்பதோடு இந்த இனிப்பையும் சேர்த்து வழங்கும் போது தாயாரின் அனுகிரகமும் இனிப்பு சுக்கிரனுக்கு உகந்த பொருள் இதை தரும் போது சுக்கிரன் அருளும் கிடைக்கிறது.

- Advertisement -

இத்துடன் வீட்டில் எப்போதும் நெல்லிக்காய் ஊறுகாயும் நார்த்தங்காய் ஊறுகாயும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஊறுகாய் மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த பொருள் அதே நேரத்தில் ஊறுகாய் வீட்டில் இருக்கும் போது குபேர சம்பத்து கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வகை ஊறுகாய்கள் நம் வீட்டில் இருக்கும் போது நிச்சயம் பணவரத்து தாராளமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பரிகாரங்களை வட இந்தியர்கள் பின்பற்றி வருவதாக சொல்லப்படுகிறது எனவே தான் அவர்களுடைய கலாச்சாரத்தில் இனிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எப்பொழுதும் வீட்டில் இனிப்பு வைத்திருப்பதையும் அதிகமாக இனிப்பு உண்பதையும் வழக்காக வைத்துக் இருக்கிறார்கள். இவர்களின் அனுகிரகத்தை பெறுவதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு சூட்சம வழியாகவே சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நீங்க தொட்டதெல்லாம் துலங்கி கைராசிகாரராய் மாற கல் உப்பை வைத்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் இதை செய்தால் போதும் உங்கள் கைகளில் மஹாலஷ்மி தாயாரே குடி கொடு நீங்கள் கைராசிகராய் மாறி விடுவீர்கள்.

இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் இது போல நாமும் நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு இனிப்பை தானமாக வழங்கி மகாலட்சுமி தாயார் சுக்கிரன் இவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு வீட்டில் எப்போதும் இந்த வகை ஊறுகாயும் வைத்து இருந்து குபேரருடைய அருளையும் பரிபூரணமாக பெறலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -