வெள்ளிக்கிழமை பூஜையில் 1 கைப்பிடி கல்கண்டு வைத்து இப்படி வழிபாடு செய்தாலே போதும். உங்கள் கடன் அனைத்தும் காணாமல் போகும்.

mahalashmi
- Advertisement -

எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் முன்னேற்றம் இல்லை. வேலைக்கு சென்றாலும் அதில் வருமானம் இல்லை. இறுதியில் நமக்கு மிஞ்சியது எல்லாமே கடன் மட்டும் தான். பணப்பிரச்சனை மட்டும் தான். இதனால் மனதிலும் வீட்டிலும் நிம்மதியை, முழுமையாக இழந்து விட்டீர்களா. இதில் இருந்து வெளிவருவதற்கு முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியான ஒரு வெள்ளிக்கிழமை பூஜை பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்போதும் போல உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையை எப்படி தயார் செய்வீர்கள், அதன்படி தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கூடவே மகாலட்சுமி தாயாருக்கு ஒரு தாமரை பூ, பெருமாளுக்கு துளசி இலைகள் தேவை. இந்த இரண்டு பொருட்களும் அவசியம் பூஜைக்கு தேவைப்படும். முந்தைய நாளே கூட தயாராக வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பாக இந்த பூஜை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளும் மகாலட்சுமி தாயாரின் படம் இருந்தால் மிக மிக சிறந்தது. வெள்ளிக்கிழமை எப்போதும்போல பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வாசனை மிகுந்த தூபம் ஏற்றி வைத்துவிட்டு, பெருமாலுக்கு துளசியும் மகாலட்சுமிக்கு தாமரைப் பூவும் வைத்துவிட்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் கண்டு, அந்த கல்கண்டு மேலே இரண்டு ஏலக்காய், இரண்டு முந்திரி பருப்பு, இரண்டு பாதாம் பருப்பு, நான்கைந்து உலர் திராட்சைகளை போட்டு, அப்படியே பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் நிவேதனமாக வைத்து, உங்களுடைய வெள்ளிக்கிழமை பூஜையை செய்ய வேண்டும்.

kalkandu

மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம், கடன் சுமை, அனைத்தும் சரியாகி விட வேண்டுமென்று பூஜையறையில் அமர்ந்து கண்களை மூடி 10 நிமிடம் தியான நிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும். ஆத்மார்த்தமான வேண்டுதல். அதன்பின்பு எப்போதும்போல இறுதியாக கற்பூர ஆரத்தியை சுவாமி படங்களுக்கு காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நிவேதனமாக வைத்த கல்கண்டு மற்ற பொருட்களையும் சேர்த்து பிரசாதம் இருக்கின்றது அல்லவா அதை வீட்டில் இருப்பவர்கள் முதலில் கொஞ்சம் சாப்பிட்டு விட வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், குழந்தைகளுக்கு அந்த பிரசாதத்தை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். வாரம்தோறும் உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜையில் கல்கண்டு பிரசாதத்தை இப்படி வைத்து பூஜை செய்து தானம் கொடுத்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும். ஒரு வாரத்தில் பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து 11 வாரங்கள் செய்யும்பட்சத்தில் நல்ல பலன் கண்கூடாக நீங்களே காணலாம்.

mahalakshmi1

அடுத்தபடியாக இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கியவுடன் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் உங்களால் முடிந்தால், திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரை சென்று ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த ஸ்ரீரங்கநாதரை அதிகாலை வேலை 5 மணி அளவில் தரிசனம் செய்ய வேண்டும். இதை விஸ்வரூப தரிசனம் என்று சொல்லுவார்கள். உங்களால் முடிந்தால் உங்களுக்கு பாக்கியம் கிடைத்தால், இந்த தரிசனத்தை ஒரு முறை செய்தாலே போதும். வாழ்வில் இருக்கும் கடன் பிரச்சனைகள் பண பிரச்சனைகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக போய் விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -