குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும், மனநிம்மதியும், காலாகாலத்திற்கும் நிலைத்திருக்க எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இந்த 1 தெய்வத்தின் திருவுருவப்படம் நிச்சயம் இருக்கனும்.

mahalashmi
- Advertisement -

ஒரு வீட்டில் பணம் காசு இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மன நிம்மதியும் இருக்க வேண்டும். மனநிம்மதி இல்லாமல் வெறும் பணத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது. மன நிம்மதி நிறைவாக இருக்குங்க. ஆனால் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்றால் மன நிம்மதி வந்த வழியே திரும்பிப் போய்விடும். இதுதான் நிதர்சனமான உண்மை. வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவான பணத்தோடு, சேர்ந்த மன நிம்மதிதான் ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். இதை நாம் புரிந்து கொண்டாலே வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விடலாம். சரி, ஆன்மீக ரீதியாக நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க மன நிம்மதி நிலைத்திருக்க வீட்டில் எந்த படத்தை வைத்து எப்படி வழிபாடு செய்வது.

நம் எல்லோருக்குமே தெரியும் விஷ்ணு பகவானின் முகத்தில் மனநிம்மதி நிறைந்திருக்க காரணம், அவருடைய மனதில் மகாலட்சுமி குடி இருப்பது தான். மகாலட்சுமி, விஷ்ணு பகவானின் மனதில் குடியிருந்து செல்வ வளங்களை அள்ளி கொடுக்க, விஷ்ணு பகவானின் முகத்தில் மன நிம்மதியும் தெளிவும் எப்போதும் இருக்கின்றது. விஷ்ணு பகவானும் மகாலட்சுமியும் சேர்ந்து இருக்கக்கூடிய திருவுருவப்படம் ஒவ்வொருவருடைய பூஜை அறையிலும் இருக்க வேண்டும். சரி, இந்த படத்தை பூஜை அறையில் வைத்து விட்டால் மட்டும் போதுமா. அவர்களை தினமும் வழிபாடு செய்ய வேண்டாமா.

- Advertisement -

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வேலையை தொடங்குவதற்கு முன்பு பூஜை அறையில் சிரித்த முகத்தோடு இருக்கும் விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் மனதார கண்குளிர தரிசனம் செய்துவிட்டு, அவர்களுக்கு ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மல்லிகைப் பூ சூட்டி அவர்களுடைய ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மூன்றே வரி மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஓம் வரப்ரதாய நமஹ!
ஓம் பரமாத்மநே நமஹ!
ஓம் ஆதித்யாய நமஹ!

- Advertisement -

மந்திரத்தை உச்சரித்து விட்டு நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தம்பதியாக இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்தால் இன்னும் சிறப்பான பலன்களை பெறமுடியும். அதன் பின்பு உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்க வேண்டும். தினசரி இந்த வழிபாட்டை செய்து வருபவர்கள்.

உடைய வீட்டில் நிம்மதி நிலையாக நிற்கும். லட்சுமி கடாட்சம் நிலையாகத் தங்கும். வீட்டில் சண்டை சச்சரவு இருக்காது. தன தானியத்திற்கு குறைவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். உங்கள் குடும்பத்திற்கு எல்லாம் நல்லதாகவே நடக்க அந்த மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் அருள் புரிவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -