இந்த 1 பூவை மகாலட்சுமிக்கு வைத்து தினம் தோறும் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கலமும் மகிழ்ச்சியும், மலைபோல் செல்வமும் குவியும்.

cash-mahalakshmi
- Advertisement -

சுவாமிக்கு அர்ப்பணம் செய்யக்கூடிய எல்லா வகையான பூக்களுக்குமே மகத்துவம் அதிகம். சுவாமியின் மேனியோடு ஒன்றி இருக்கக்கூடிய பாக்கியம் இந்த பூவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை சுவாமிக்கு அடுத்து பெண்களால் தான் சூடிக்கொள்ள முடியும். ஆகவே இந்த உலகத்தில் பெண்களும் சுவாமியும் வேறு வேறு அல்ல. இறைவனுக்கு கொடுக்கக் கூடிய மரியாதையை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் நீங்கள் கொடுத்து நடக்க வேண்டும். அதற்காக இறைவனும் பெண்களும் சமமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். இறைவனுக்கு நிகராக உங்களுடைய தாய், மனைவி, பெண் பிள்ளைகளை நினைக்கும் போது அவர்கள் மேல் ஒரு மரியாதை ஏற்படும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

மகாலட்சுமிக்கு விருப்பமான பூ என்றால் அது செண்பகப்பூ. இது சுக்கிர பகவானுக்கும் உரிய பூவாக சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய வாழ்வில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தேவை. நவகிரகங்களில் சுக்கிர பகவானின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்க வேண்டும். ஆக வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு ஒரே ஒரு மரிக்கொழுந்து பூவை வைத்து, மகாலட்சுமி பூஜையை செய்யும் போது நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

தினமும் உங்களுக்கு இந்த செண்பகப் பூ கிடைத்தால் இன்னும் விசேஷம். தினமும் மகாலட்சுமிக்கு அந்த பூவை வைத்து வழிபாடு செய்யும்போது வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. பூக்கடைக்காரர்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்தால் உங்களுக்கு தேவையான மரிக்கொழுந்து பூவை அவர்கள் கொண்டுவந்து உங்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

அடுத்ததாக மரிக்கொழுந்து. இந்த மரிக்கொழுந்து வாசத்திற்கு மயங்காத நல்ல சக்தியே கிடையாது. மரிக்கொழுந்தை வாங்கி பூஜையறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்து, வழிபாடு செய்யும்போது வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் தெய்வ சக்தி வசியமாகும். இந்த வாசத்திற்கு கெட்ட சக்திகள் நெருங்காது.

- Advertisement -

கணவன் மனைவி வசியத்திற்கும் இந்த மரிக்கொழுந்து முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களுடைய தாலி சரடில் சிறிய மரிக்கொழுந்தை எடுத்து கட்டிக் கொண்டால் கணவன் மனைவி வசியம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை இருக்காது. கணவனுக்கு மனைவியை பார்க்கும்போது சுத்தமாக பிடிக்காது. மனைவிக்கு கணவனை பார்க்கும்போது சுத்தமாக பிடிக்காது. எலியும் பூனையும் ஆக சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட வீட்டில் மனைவி தன்னுடைய தலையிலும், தன்னுடைய திருமாங்கல்யத்திலும் சிறிது மரிக்கொழுந்தை சூடிக் கொண்டாலே போதும். கணவன் மனைவிகுள் ஒற்றுமை ஏற்படும்.

இது தவிர்த்து நாகலிங்கப்பூ, மல்லிகைப்பூ, தாமரை பூ, அரளிப்பூ என்று வாசனை நிறைந்த அதீத சக்தி வாய்ந்த எந்த பூக்கள் கிடைத்தாலும் அதை வாங்கி இறைவனுக்கு சூட்டலாம். பெண்களும் தங்களுடைய தலையில் சூட்டிக் கொள்ளலாம். தினமும் பூ வாங்க முடியாதவர்கள் கூட வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமையில் பூக்களை வாங்கி பயன்படுத்துவது குடும்பத்தின் செல்வ செழிப்புக்கு நன்மையை கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்று கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -