பெண்களை மகாலட்சுமி சுவரூபமாக மாற்றும் மகத்துவம் நிறைந்த மரிக்கொழுந்து. உங்களை பார்த்தால் மகாலட்சுமியை பார்க்க தேவையே இல்லை.

lakshmi-women
- Advertisement -

பெண்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஸ்ருபம் கொண்டவர்கள் தான். அவர்களுடைய முகத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொண்டு இருப்பாள். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. எந்த ஒரு வீட்டில் பெண்கள் இல்லையோ அந்த வீடு கலை இழந்து தான் காணப்படும். எந்த ஒரு வீட்டில் பெண் குழந்தைகள் நிறைய இருக்கிறார்களோ, அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. எப்போதுமே அந்த வீட்டில் சிரிப்பு சத்தமும், கொலுசு சத்தமும், வளையல் சத்தமும், கேட்டுக்கொண்டே இருக்கும். இதைவிட மன நிறைவு கொடுப்பதற்கு வேறு ஒரு சங்கீதம் இருக்கிறதா என்ன. இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட பெண்களை மேலும் மெருகேற்றிக்கொள்ள ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பெண்களுக்கு இந்த மகாலட்சுமியின் அம்சம் இயற்கையாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு திடீரென்று முகம் ஏதோ ஒரு காரணத்தால் சோர்வடைந்து விடும். இப்படி முகம் பொலிவிழிப்பதற்கும் சோர்வு அடைவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் உள்ளது.

- Advertisement -

முகம் பொலிவிழக்க, ஏதோ ஒரு கெட்ட துர் சக்திகளின் சேட்டையாக கூட இருக்கலாம். பெண்களுடைய முகத்தில் திடீரென்று ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது. அழகாக அம்சமாக இருந்த முகம் இப்போது தெளிவாக இல்லை எனும் பட்சத்தில் அவர்களை மீண்டும் தெளிவாக மாற்றுவதற்கு இந்த பரிகாரம் செய்யலாம்.

அதற்காக பிரச்சனை உள்ள பெண்கள் தான் இந்த பரிகாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். உங்களுடைய அழகு மேலும் மேலும் மெருகேறும். ஒரு தேஜஸ் மகாலட்சுமி அம்சம் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் மரிக்கொழுந்து.

- Advertisement -

மரிக்கொழுந்து காய்ந்து இருந்தாலும் பரவாயில்லை. பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். மரிக்கொழுந்தை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து சுருட்டி இரவு தூங்கும் போது உங்களுடைய தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே தூங்கி விடுங்கள். இந்த பாசத்திற்கு இரவு நல்ல தூக்கமும் வரும். (ஆனால் கடையிலிருந்து வாங்கிய மாதிரி கொழுந்தை கொஞ்சம் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய பூச்சிகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.)

மறுநாள் காலை எழுந்து தலையணைக்கு பக்கத்தில் வைத்த மரிக்கொழுந்தை சிறிது நேரம் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு வையுங்கள். பத்து நிமிடத்தில் மரிக்கொழுந்தின் வாசம் குளிக்கின்ற தண்ணீரில் இறங்கி இருக்கும். மரிக்கொழுந்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, அந்த தண்ணீரில் நீங்கள் குளித்து விடலாம்.

தினமும் தொடர்ந்து 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 11 நாட்களும் தலையணைக்க அடியில் புதிய மரிக்கொழுந்தை வைத்து தூங்க வேண்டும். அந்த மரிக்கொழுந்தை எடுத்து குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளியலை மேற்கொண்டால், உங்கள் முகத்தை உடம்பை பிடித்த பீடை விலகும்.

சில பெண்களுக்கு எப்போதும் வியர்வை வடிந்து உடலில் வியர்வை நாற்றம் உண்டாகும் அல்லவா. அந்த பிரச்சனை எல்லாம் கூட படிப்படியாக குறைந்து உங்களுடைய தேகம் எப்போதும் வாசமாக இருக்கவும் இந்த குறிப்பு நல்ல பலனை கொடுக்கும். இதோடு மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் உங்கள் உடம்பில் வந்து புகுந்திருக்கும் அத்தனை கெட்ட சக்தியும் உங்களது உடம்பை விட்டு நீங்கிவிடும். 11 நாட்கள் கழித்து இந்த குறிப்பை அப்படியே விட்டு விடாதீர்கள். வாரத்தில் ஒரு முறை இந்த தண்ணீரில் குளித்து வர உங்களுடைய சருமம் மேலும் மெருகேறும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -