இப்படி ஒரு முறை ஆரத்தி எடுத்தால் உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு இருக்கும் கண் திருஷ்டி எல்லாம் போய்விடும். பணமும் நகையும் மேலும் மேலும் பெருகும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் இன்பம் தொலைந்து போவதற்கும், துன்பம் நம் பின்னால் தொடர்ந்து வருவதற்கும் காரணம், நம் வீட்டில் நிறைவாக இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து அடுத்தவர்கள் ஏக்கப்படுவது தான். இவர்களை போல இன்பமாக நம்மால் வாழ முடியவில்லையே, என்று நம் குடும்பத்தை பார்த்து கண்திருஷ்டி வைத்துவிட்டால் போதும். நம் வீட்டில் இருக்கும் செல்வ கடாட்சத்திற்க்கு பிரச்சனை வந்துவிடும். பண கஷ்டம் வந்து விடும். நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைமையும் வந்துவிடும். வீட்டில் இருக்கும் சந்தோஷம் தானாக வெளியே சென்றுவிடும்.

ஆனால், கஷ்டங்கள் இல்லாத மனிதர்களே கிடையாது. நம் கஷ்டத்தை மறைத்துக்கொண்டு சந்தோஷத்தை மட்டும் வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருப்போம். அது யார் கண்ணுக்கும் தெரியாது. எதிராளிக்கு அது புரிவதும் கிடையாது. இருந்தாலும் நம் வீட்டில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமியின் மேல் திருஷ்டி விழுந்து விட்டால், அது நம் வீட்டிற்கு தானே பிரச்சினை. வாரத்தில் ஒருமுறையோ, மாதத்தில் ஒரு முறையோ இப்படி கண் திருஷ்டி கழித்து விடுங்கள். உங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.. அடுத்தவர்களின் கண் பார்வையால் எந்த பிரச்சனையும் உங்கள் குடும்பத்திற்கு வராது.

- Advertisement -

சிவப்பு சந்தனம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் கொஞ்சம் சிவப்பு சந்தனத்தை போட்டு பன்னீர் ஊற்றி, கரைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே வாழை இலை அல்லது வெற்றிலை வைத்து அதன் மேலே ஒரு கற்பூரத்தை வைத்து, ஆரத்தி போலவே சூடத்தை ஏற்றி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் லட்சுமி ஸ்வரூபத்தில் இருக்கும் பணம் நகை இவைகளை ஒரு தட்டிலோ அல்லது துணியின் மீது வைத்து, இந்த ஆரத்தியை அந்த பொருட்களுக்கு எடுக்க வேண்டும். எப்படி மனிதர்களுக்கு ஆரத்தி சுற்றுவோமோ, அதேபோல வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பணம் நகை இவைகளுக்கு 3 முறை சுற்றி ஆராத்தி எடுத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஆராத்தியை கொண்டுபோய் எப்போதும் போல உங்கள் வீட்டு வாசலில் கொட்டிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று இப்படி வீட்டில் இருக்கும் பணம் நகைக்கு திருஷ்டி கழிப்பது மிகவும் நல்லது. அம்மாவசை நாள் அன்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம் வீட்டிற்குள் வரும் வருமானம் வீண்செலவு ஆகாமல் இருக்கும். நகை அடமானதிற்கு போகாமல் தொலையாமல் உடையாமல் இருக்கும்.

உங்கள் வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டாக பணம், நகை அத்தனையும் வெளியில் எடுத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு சிறிய தொகை, சிறிய நகை வைத்து இப்படி ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்த அந்த பணம் நகையை எடுத்து உங்களுடைய பீரோவில் மொத்தமாக இருக்கும் பணம் நகையுடன் சேர்த்து விடவேண்டும். இப்படி செய்தாலே நிச்சயம் நல்ல மாற்றங்கள் தெரியும். நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -