உங்க வீட்டில் இந்த செடி இல்லையா? இந்த செடி எந்த அளவிற்கு பூத்து குலுங்குகிறதோ, அந்த அளவுக்கு சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகிக்கொண்டே செல்லும்.

mahalashmi
- Advertisement -

வீட்டில் வைக்க வேண்டிய செடி, வீட்டில் வைக்கக் கூடாத செடி என்ற பட்டியலில் நிறைய செடிகள் உள்ளது. உங்களுடைய மனதிற்கு திருப்தி தரக்கூடிய செடிகளை நீங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த செடியை வைத்தால் எனக்கு ராசி இல்லை, இந்த செடி எங்கள் குடும்பத்திற்கு நன்மையை செய்யாது என்று நினைப்பவர்கள் அந்த செடியை வீட்டில் வைக்காமல் தவிர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான். அப்படி இருக்கும்போது எல்லோருக்கும் ராசி தரக்கூடிய, எல்லோராலும் வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய ஒரு செடி என்றால் அது மல்லிகை பூச்செடி தான். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இந்த மல்லிகை பூச்செடி வளர்க்கலாம். தவறு கிடையாது.

மல்லிகைப்பூ என்பது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பூ. வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் மல்லிப்புவின் விலை ஓரளவுக்கு கூடவோ குறையவோ இருந்தாலும் அதை பணம் கொடுத்து வாங்குவது நமக்கு சுபிட்சத்தை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் மல்லி பூ கிடைக்கும் போதெல்லாம் அதை வாங்கி தங்களுடைய தலையில் சூடிக்கொள்ள வேண்டும். பெண்கள் உடம்பில் தரித்திரம் விலகும்.

- Advertisement -

வாசம் நிறைந்த இந்த மல்லிகை பூ கிடைக்கும் சமயத்தில் அதை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். இந்த வாசம் நம் வீட்டில் நிறைந்திருக்கும் போது நாம் வீட்டை விட்டு பீடை வெளியேறிவிடும். நம் வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேறி விடுவாள். இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய இந்த மல்லி பூ செடி நம்முடைய வீட்டிலேயே இருந்தால் நமக்கு எத்தனை நன்மையை தரும்.

ஆமாங்க வீட்டில் முன்புறம் இடம் இருந்தாலும், பின்புறம் இடம் இருந்தாலோ ஒரு சிறிய தொட்டியில் மல்லி பூ செடியை வைத்து பராமரித்து வாருங்கள். பூமியில் இந்த மல்லி பூ செடியை வைக்க முடியும் என்றால் தாராளமாக வைத்து வளர்க்கலாம். மல்லி பூ செடியை நீங்கள் எந்த அளவிற்கு ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு அதில் மல்லி பூக்கள் பூத்துக் குலுங்கும். மொட்டுக்கள் விரியத் தொடங்கும். அப்போது அந்த இடமே மல்லிகை பூ வாசத்தில் நிறைந்திருக்கும்.

- Advertisement -

இப்படி மல்லிப்பூ பூத்திருந்தால் அது நம்முடைய வீட்டிற்கு மிக மிக நல்லது. மல்லிகைப்பூ எந்த அளவிற்கு நீங்கள் வைத்திருக்கும் செடியில் பூக்கின்றதோ அந்த அளவிற்கு உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சியும் மலர்ந்து இருக்கும். சில பேர் இந்த இடத்தில் கட்டாயம் ஒரு கேள்வியை எழுப்புவார்கள்.

எங்க வீட்ல மல்லிப்பூ செடி காலங்காலமா இருக்கு. ஆனா நாங்க ஏழைய தான் இருக்கோம். அப்படின்னு நிச்சயமா சொல்வீங்க. ஆனா சந்தோஷத்திலும் மனநிறைவிலும் உங்கள் வீடு பணக்கார வீடாக தான் இருக்கும். பணம் காசு ஏற்ற இறக்கங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கலாம். ஆனால் எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாத மன நிம்மதி என்பது உங்களுடைய வீட்டில் நிறைவாக இருக்கும். நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

- Advertisement -

இன்னும் சில பேர் சொல்லுவார்கள் நாங்கள் மல்லிகை பூ தோட்டம் வைத்து மல்லிகை பூ வியாபாரமே செய்கின்றோம். ஆனால் எங்களுக்கும் கோடி கணக்கில் பணம் இல்லை என்று. நிச்சயம் உங்களுடைய வீட்டிலும் மன நிம்மதிக்கு குறைவு இருக்காது. (சாதாரணமாக அப்பப்போ கஷ்டங்கள் வருவது போவது என்பது வாழ்க்கையில் இயல்புதான். ஆனால் அதையும் தாண்டி நாம் நிம்மதியாக வாழ இந்த மல்லிகை பூச்செடி வளர்ப்பு ஒரு பரிகாரமாக நிச்சயமாக இருக்கும். செடியில் பூத்திருக்கும் மல்லிகை பூவை இரண்டு நிமிடம் பார்த்தாலே மனதில் இருக்கும் பாரம் குறையும் அல்லவா.)

இதையும் படிக்கலாமே: நினைத்தது உடனே நடக்க இதை எழுதுங்கள். இரண்டே நாட்களில் நம்ப முடியாத அதிசயம் நிச்சயம் நடக்கும்.

கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும் மல்லிகை பூச்செடி இருக்கும் வீட்டில் நிச்சயம் மன மகிழ்ச்சி இருக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -