நினைத்தது உடனே நடக்க இதை எழுதுங்கள். இரண்டே நாட்களில் நம்ப முடியாத அதிசயம் நிச்சயம் நடக்கும்.

vetrilai-cash
- Advertisement -

நியாயமான கோரிக்கை. எனக்கு இந்த நல்ல விஷயம், குறிப்பிட்ட இந்த சமயத்தில் நடந்திருக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஏனோ நேரம் காலம் காரணமாக தாமதித்துக் கொண்டே செல்கிறது. இந்த நல்லது நடந்து விட்டால் போதும். எனக்கு மனது நிம்மதியாகிவிடும் என்ற பிரச்சனை நம்மில் எல்லோருக்கும் இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு என் பெண்ணுக்கு திருமணம் நடக்கவில்லை. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகின்றோம். வரன் கைக்கூடி வரும் சமயத்தில் கைநழுவி செல்கிறது.

நல்ல வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக தள்ளிப் போக்கிக் கொண்டே இருக்கிறது. இந்த சொத்து வாங்குவதற்கு எல்லாம் தயாராக உள்ளது. ஆனால் பத்திரப்பதிவு மட்டும் நடக்கவில்லை. இந்த கடன் எனக்கு வசூல் ஆகவில்லை. இந்த கடனை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை அல்லது உறவுகளுக்குள் சண்டை. அல்லது மனதிற்குள் இருக்கும் நீண்ட நாள் கனவு அல்லது ஆசை, என்று எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் ஒரு வெற்றிலை. வெற்றிலையில் எழுதுவதற்கு ஸ்கெட்ச் பென். உருண்டை கிழங்கு மஞ்சள் 1 அவ்வளவுதான். கருப்பு நிறம் அல்லாத வேறு எந்த கலர் ஸ்கெட்ச் வேண்டும் என்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை எடுத்து உங்களுடைய கோரிக்கையை அந்த வெற்றிலையில் எழுதி கிழங்கு மஞ்சளை அதன் நடுவே வைத்து வெற்றிலையை சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

கடன் அடைய வேண்டும். கடன் கிடைக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட இவருக்கு உடல்நிலை சரியாக வேண்டும். குறிப்பிட்ட இவருக்கு திருமணம் நடக்க வேண்டும். என்று அவருடைய பெயரை எழுதி, கோரிக்கையை தாராளமாக எழுதலாம். கட்டி வைத்திருக்கும் வெற்றிலையை உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள் பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து இந்த வெற்றிலையை கையில் வைத்துக்கொண்டு இறைவனை மனம் உருக வேண்டி, வெற்றிலையில் எழுதிய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து. அந்த வெற்றிலையை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் எழுதிய கோரிக்கை நிறைவேற தேவையான முயற்சிகளை நீங்கள் அதன் பின்பு தாராளமாக மேற்கொள்ளலாம். வெற்றிலையில் எழுதியது நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் நடக்கும். வாரம் ஒரு முறை வெற்றிலையை மட்டும் மாற்றி மீண்டும் கோரிக்கையை எழுதி அதே மஞ்சளை வைத்து மீண்டும் சுருட்டி கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இந்த வெற்றிலை பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: சம்பாதித்த பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கவும், வாங்கிய கடனை விரைவில் அடைக்கவும், இந்த ஒரு பொருளை முதலில் வீட்டிற்க்கு வாங்கி விடுங்கள்.

நீங்கள் வெற்றிலையில் எழுதியது நியாயமான கோரிக்கையாக இருந்தால் மூன்று வாரங்களில் அந்த கோரிக்கையை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றி தரும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் அடைய இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -