மல்லிகைப் பூவை பூஜை அறையில் இப்படி வைத்தால் போதும். தனலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கி விடுவாள்.

mahalashmi1
- Advertisement -

செல்வ திருமகளான தனலட்சுமியை நம் வீட்டில் நிரந்தரமாக, மன மகிழ்ச்சியோடு தங்கவைத்து விட்டாலே போதும். வீட்டில் செல்வ கடாட்சத்திற்க்கு என்னாலும் ஒரு குறைவும் இருக்காது. அஷ்ட லட்சுமிகளில் ஒரு லட்சுமி ஆன தனலட்சுமியை அதாவது, பொன் பொருள் ஐஸ்வரிய கடாட்சத்தை நம் வீட்டிற்கு சேர்க்கக்கூடிய இந்த திருமகளை வசியம் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாசம் நிறைந்த மல்லிகை பூ இருந்தால் போதும். நம் வீட்டில் தனலட்சுமியை நிரந்தரமாக தங்க வைக்க முடியும்.

malligai poo

இந்த பரிகாரத்தை செய்வதற்கு 1 விரலிமஞ்சள், 1 எலுமிச்சம்பழம், 1 கைப்பிடி நிறைய மல்லிகைப்பூ, 1 ரூபாய் நாணயம், நமக்கு தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எச்சில் படாத பத்திரமாக இருக்கட்டும். அதில் முதலில் எலுமிச்சம்பழம், விரலிமஞ்சள், ஒரு ரூபாய் நாணயம்,  இந்த பொருட்களை வைத்துவிட்டு அதன் மேலே மல்லிகை பூவை நிரம்ப கொட்டிவிட வேண்டும். கட்டாத மல்லிகை பூவாக இருந்தால் மேலே அப்படியே தூவி விடுங்கள். தொடுத்த மல்லிகை பூ கிடைத்தால் அதை அப்படியே சுருட்டி இந்தப் பொருட்களின் மீது வைத்து அப்படியே மூடி விடுங்கள்.

- Advertisement -

அலங்கரித்து வைத்திருக்கும் இந்த கிண்ணத்தை அப்படியே பூஜை அறையில் மகா லட்சுமி தாயாரின் பாதங்களில் முன்பு வைத்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் தங்க நாணயங்கள் வெள்ளி நாணயங்கள் இருக்கும்பட்சத்தில் அந்த இரண்டு நாணயத்தையும் இந்த கிண்ணத்திற்கு உள்ளே வைக்கலாம்.

ashtalakshmi

நல்ல சக்தியை வசியம் செய்யக்கூடிய, வாசம் தான் இந்த மல்லிகை பூவின் வாசம். குறிப்பாக அம்பாளுக்கு மிக மிக உகந்த ஒரு பூவாக சொல்லப்பட்டுள்ள இந்த வாசம் நிறைந்த மல்லிகை பூவை நம் வீட்டுப் பூஜை அறையில் ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய பொருட்களோடு சேர்த்து வைக்கும் போது, நிச்சயமாக நம் வீட்டில் வருமானத்திற்கு தடை இருக்காது. வறுமை இருக்காது. தன தானியத்திற்கு பஞ்சமும் ஏற்படாது.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினம்தோறும் பரிகாரத்தை செய்வதிலும் தவறு இல்லை. கிண்ணத்தின் மேல் வைத்திருக்கும்  வாசனை நிறைந்த மல்லிகை பூவை மட்டும் அன்றாடம் மாற்றி விட்டால் போதும். உள்ளே இருக்கும் மற்ற பொருட்களை தினமும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. எலுமிச்சம்பழம் வாடிய பின்பு மாற்றினால் மட்டுமே போதும். பழைய எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

ashta-lakshmi

எலுமிச்சம் பழம், மஞ்சள், நாணயங்கள், மல்லிகை பூ, இவைகளை கிண்ணத்தில் வைக்கும்போது மனதார ‘எங்கள் வீட்டில் தனலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, மகாலட்சுமி, முடிந்தால் அஷ்டலட்சுமிகளின் பெயரை உச்சரித்து, லட்சுமி தேவிகள் எங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் கையில் எலுமிச்சம்பழத்தை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன பிரார்த்தனையை வேண்டி பரிகாரத்தை செய்கிறீர்களோ, அந்த பரிகாரத்திற்கு உடனடி பலன் கிடைக்கும். மேல் சொன்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -