எப்போது பார்த்தாலும் மன அழுத்தத்துடன், கோபத்துடன் டென்ஷனோடு இருப்பவர்களையும் சாந்தப்படுத்தும் ‘படிகார பரிகாரம்’.

padikaram2
- Advertisement -

படிகாரத்திற்கு கண் திருஷ்டியை, எதிர்மறை ஆற்றலை விளக்கக்கூடிய சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் இந்த படிகாரம் திருஷ்டி கழிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. இந்த படிகாரத்தை வைத்து வீண் கோபப்படுபவர்களையும், எப்போதும் கடுகடுவென இருப்பவர்களையும், எப்போதும் டென்ஷனோடு மன அழுத்தத்தோடு இருப்பவர்களையும் சரி செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

angry

ஒரு பெரிய கட்டி படிகாரத்தை நாட்டு மருந்து கடைகளில் மருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்து வாருங்கள். கொட்டாங்குச்சியிலோ அல்லது அடுப்பிலோ நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் கட்டி படிகாரத்தை சுட வேண்டும். அதாவது படிகாரத்தை நெருப்பில் போட்டு விட வேண்டும். படிகாரத்தை நெருப்பில் போட்டதும், அப்படியே பொங்கி அடங்கிவிடும். நீங்கள் வாங்கி வந்த படிகாரத்தின் வடிவமே வேறு மாதிரி மாறி விடும். ஆனால் அப்படியே கட்டி ஆகத்தான் இருக்கும். (நெருப்பை மூட்ட உங்கள் வீட்டில் வழி இல்லை என்றால், ஒரு இடுக்கியில் படிகாரத்தை பிடித்துக்கொண்டு, கேஸ் அடுப்பில் இருக்கும் நெருப்பிலேயே ஜாக்கிரதையாக காட்டிக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

நெருப்பில் போட்ட இந்த படிகார கட்டி, நன்றாக ஆறியதும் அதை ஒரு கல்லில் வைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த படிகாரப் பொடியை ஒரு பாட்டிலில் போட்டு மூடி பூஜையறையில் வைத்து, ஒரு தீபம் ஏற்றி குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் வைத்திருக்கும் இந்த படிக்காரத் தூளை தான் நாம் பரிகாரத்திற்கு பயன்படுத்த போகின்றோம்.

padikaram1

எப்போது பார்த்தாலும் மன அழுத்தத்தோடு, கோபத்தோடு எரிந்து எரிந்து விழுபவர்களுக்கு இந்த படிகாரக்கல் துகள்களை வைத்து திருஷ்டி கழிக்க வேண்டும். எப்படி? யாருக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றதோ அவர்களை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் இருக்கும் படிகார துகள்களை வலதுகையில் எடுத்துக்கொண்டு, பிரச்சனை உள்ள நபரினுடைய தலையை மூன்று முறை சுற்றி, அவருடைய உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தொட்டவாறு, மேல் புறத்திலிருந்து கீழ் பக்கம் வரை உங்களது கையை இறங்க வேண்டும். உங்கள் கை அந்த நபரின் மேல் உரசி கொண்டே கீழ்பக்கமாக இறங்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். உங்கள் கையில் இருக்கும் திருஷ்டி கழித்த பரிகாரத்தை தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து ஒன்பது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று படிகாரத் துகள்களை இப்படி சுற்றிப் போட்டால், முன்கோபம் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுவென இருக்கும் கோபம் தணிந்து சாந்தமாக மாறுவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

padikaram

உங்களுக்கு இந்த படிகார துகள்களை எடுத்து சுற்றி போட ஆள் இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு முன்கோபம் உள்ளதாக நீங்களே உணர்ந்தாலும் சரி, நீங்கள் மன அழுத்தம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நீங்களே மேல் சொன்ன முறைப்படி சுற்றிப் போட்டுக் கொண்டும், உங்கள் மேல் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையோடு செய்தால் ஒன்பது வாரங்களில் உங்கள் மன நிலைமையில் நிச்சயமாக வித்தியாசத்தை உணர முடியும் என்ற கருத்தை இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -