மன கஷ்டத்தை நீக்கும் கல் உப்பு பரிகாரம்.

sivan4
- Advertisement -

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மருந்து மாத்திரை சாப்பிட்டு, மருத்துவரிடம் சென்று சரி செய்து விடலாம். ஆனால் மனசு சரியில்லை என்றால் அதை சரி செய்ய எந்த மருத்துவமும் கிடையாது. எந்த மாத்திரையும் கிடையாது. மனசை சரி செய்ய கூடிய மகத்துவம், நம்முடைய மனசுக்கு தான் இருக்குது. ஆமாங்க, மனதை சரிப்படுத்தும் மாத்திரை மனசுதான்.

குழப்பத்தில் இருக்கும் உங்கள் மனதை, கலங்கிப்போன உங்கள் மனதை தெளிவுபடுத்த ஒரு அருமையான எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். தலைப்பை படித்த உடனே நமக்கு தெரிந்திருக்கும். இந்த பரிகாரம் கல் உப்பை வைத்து தான். உங்க மனசு குழப்பமாக இருக்கும் சமயத்தில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யுங்கள். மனதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குழம்பிய மனதை தெளிவுபடுத்தும் பரிகாரம்

பொதுவாகவே குழப்பம் என்பது ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலினால் உருவாக்கப்படுவது தான். உங்களுடைய வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கு, மனசு குழம்பி போய் பைத்தியம் பிடித்தது போல இருந்தீர்கள் என்றால், உடனே ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக்கோங்க. அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போடுங்க. அந்த டம்ளர் நிறைய தண்ணீரை ஊற்றுங்கள்.

நீங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருந்தால், உங்களுக்கு பக்கத்தில் ஒரு ஸ்டூலின் மேல் இந்த டம்ளரை வைத்து விடுங்கள். சிறிது நேரம் நீங்களும் அந்த டம்ளருக்கு பக்கத்தில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி உங்களுக்கு பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லுங்கள். ஓம் நமசிவாய செல்லலாம். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம். ராம் ராம் சொல்லலாம். ஓம் சக்தி சொல்லலாம்.

- Advertisement -

அது உங்களுடைய விருப்பம் தான். ஒரு 15 நிமிடம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். பக்கத்தில் டம்ளரில் கல்லுப்பு போட்ட தண்ணீர் இருக்கட்டும். 15 நிமிடம் கழித்து பாருங்கள். உங்களுடைய மனதானது குழப்ப நிலையில் இருந்து வெளிவந்துவிடும். உங்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் அந்த கல்லுப்பு ஈர்த்துக் கொள்ளும். அந்த கல்லுப்பு தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.

இதே போல கல் உப்பு போட்ட ஒரு டம்ளர் தண்ணீரை படுக்கையறையில் வைக்கலாம். வரவேற்பு அறையில் வைக்கலாம். இரவு இப்படி கல்லுப்பு போட்ட தண்ணீரை வைத்து விட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த தண்ணீரை எடுத்து வீட்டுக்கு வெளியே கொட்டி விட்டால், வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி நீங்கிவிடும் என்பது ஒரு நம்பிக்கை.

- Advertisement -

உங்களுடைய வீடு மொத்தமும் கஷ்டத்தில் இருக்குதா. வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒவ்வொரு மூலையில் மனசு சரியில்லாமல் இருக்கிறார்களா. சூரிய பகவான் உதயமானாலும், உங்க வீட்டில் மட்டும் இருள் இருக்கிறது என்றால், என்ன செய்யலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பே உங்களுடைய பாத்ரூமில் ஒரு கண்ணாடி டம்ளரில் கல்லுப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள்.

இந்த டம்ளரை பாத்ரூம் அலமாரியில் வையுங்கள். திருந்த படி இந்த டம்ளரை வைக்கணும். கபோர்டுக்கு உள்ள டம்ளர் வைத்து மூடாதிங்க. மறுநாள் காலை எழுந்து முதல் வேலையாக அந்த தண்ணீரை எடுத்து பாத்ரூமில் கொட்டிடுங்க. இப்படி 21 நாட்கள் குளியலறையில் இரவு நேரத்தில் கல் உப்பு கலந்த தண்ணீரை வைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அந்த இருள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: நொடிந்து போன குடும்பத்தை, செல்வ செழிப்போடு வாழ வைக்கும் செடி.

வீட்டில் இருப்பவர்களுடைய மனக்கஷ்டம் தீரும். செய்து பாருங்கள். பலன் பெறுங்கள். 21 நாட்களில் கஷ்டம் தீர இதைவிட சுலபமான பரிகாரத்தை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -