நொடிந்து போன குடும்பத்தை, செல்வ செழிப்போடு வாழ வைக்கும் செடி.

mahalashmi7
- Advertisement -

ஒரு குடும்பம் ரொம்பவும் வறுமையில் வாடி கஷ்டப்பட்டு கொண்டே இருந்தால், அந்த குடும்பத்தை நொடிந்து போன குடும்பம் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் அந்த குடும்பமானது செல்வ செழிப்போடு தான் வாழ்ந்திருக்கும். ஆனால் காலமும் நேரமும் சூழ்நிலையும் அந்த குடும்பத்தில் வறுமையை கொண்டு வந்து சேர்த்திருக்கும். கஷ்டத்தை குவித்து வைத்திருக்கும்.

இவ்வளவு கஷ்டப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு செடியின் மூலம் விடிவு காலம் கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்றுதான் சொல்ல முடியும். இந்த செடிக்கு அவ்வளவு பவர் இருக்கு. இந்த செடியை வைத்து, இதை கொடியாக படர விட்டு வளர செய்தால் உங்கள் குடும்பம் செல்வ செழிப்பில் உயரும் என்பது ஒரு நம்பிக்கை. அது எந்த செடி. அதை வீட்டில் எப்படி வைத்து வளர்க்கணும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

செல்வ வளம் பெருக நிலை வாசலில் வைக்க வேண்டிய செடி

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க நிலை வாசலில் முல்லைச் செடியை வைத்து வளர்க்க வேண்டும். நல்லதொரு காரியத்திற்காக இந்த பரிகாரத்தை நாம் செய்கின்றோம். வளர்பிறையில் ஒரு வெள்ளிக்கிழமையில் புதுசாக ஒரு முல்லைச் செடியை வாங்கி நட்டு மனதார அந்த செடியோடு பேசி, அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வாருங்கள்.

எங்கள் குடும்பமும் இந்த கொடி படர்வது போல செல்வ செழிப்பில் மேலே உயர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே தண்ணீர் ஊற்றுங்கள். அந்த செடியில் கொஞ்சம் கயிறு கட்டி உங்கள் நிலை வாசல் படி பக்கமாக கொடி படர்வது போல ஒரு செட்டப் செஞ்சு வச்சுடுங்க.

- Advertisement -

கொடியை எப்படி படர விட வேண்டும் என்பது நமக்கு தெரியும் அல்லவா. அந்த முல்லைக்கொடியானது படர்ந்து உங்களுடைய வீட்டின் சுவற்றின் மேல், அப்படியே மேலே எழும்ப எழும்ப உங்கள் குடும்பமும் செல்வ சிறப்பில் உயரும் என்பது நம்பிக்கை. பண கஷ்டத்தில் இருப்பவர்கள் இந்த செடியை வாசலில் வைத்துக் கொள்ளுங்கள்.

முல்லைக்கொடிக்கு ஒரு சக்தி இருக்கிறது. முல்லைக்கொடி எப்படி செழிப்பாக வளர்கிறதோ, அதேபோல அந்த குடும்பத்தையும் முல்லைக்கொடியானது தூக்கி விட்டு விடும். இது மிக மிக சாதாரண விஷயம்தான். ஆனால் கஷ்டப்படும் குடும்பத்தில் இருப்பவர்கள் இதை செய்து பாருங்கள்.

- Advertisement -

நிச்சயம் உங்களுடைய கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். நொடிந்து போன குடும்பமாக இருந்தால் கூட நொடிப் பொழுதில் அவர்களுடைய கஷ்டத்தை தீர்க்க ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய சக்தி இந்த முல்லை கொடிக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பிள்ளையார் வழிபாடு

இந்த முல்லை கொடியில் பூக்கக்கூடிய முல்லைப் பூக்களை பறித்து சுவாமிக்கு வைத்து இறைவனிடமும் மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -