மனக் குழப்பம் தீர, செய்யும் வேலையில் தெளிவு பிறக்க, சுறுசுறுப்பாக இருக்க, வெற்றி வாகை சூட, பலவகையான பிரச்சினைகளை தீர்க்க 1 கைப்பிடி அரிசி போதும்.

sad
- Advertisement -

நாம் நிறைய பேரை பார்த்து இருப்போம்.‌ அவர்களுக்கு திறமையும் அறிவும் படிப்பும் ஓஹோவென இருக்காது. ஓரளவுக்கு ஏதோ எழுதப்படிக்க தெரிந்திருக்கும். ஒரு அளவுக்கு திறமை இருக்கும். அதி புத்திசாலியாக எல்லாம் இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையை செய்து, சுறுசுறுப்பாக பணம் சம்பாதித்து, துருதுருன்னு இருப்பாங்க. இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதக கட்டத்தில் சந்திரன் பலமாக அமர்ந்திருப்பார். ஆனால், சில பேர் அதி புத்திசாலியாக இருப்பார்கள். அவர்களுக்கு எல்லா திறமையும் இருந்திருக்கும். பெரிய படிப்பு படித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் சோர்வோடு, எந்த வேலையிலும் ஒரு ஈடுபாடு இல்லாமல் குழப்ப நிலையோடு இருப்பார்கள்.

இதற்கு என்ன காரணம் தெரியுமா சந்திர பகவான் அவர்களுடைய ஜாதக கட்டத்தில் சிறப்பாக இல்லை என்பதுதான். சந்திர பகவான் ஜாதக கட்டத்தில் சிறப்பாக இல்லை என்றால் முகத்தில் தெளிவு இருக்காது. சுறுசுறுப்பு இருக்காது. மனக்குழப்பம் இருக்கும். செய்யும் வேலையில் தொய்வு ஏற்படும். சோம்பேறித்தனம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூட இருக்காது. மாமியார் மருமகள் சண்டை இருக்கும். நாத்தனார் பிரச்சனை இருக்கும்.

- Advertisement -

இப்படி ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் சேர்த்து ஒரு சில சுலபமான பரிகாரம் உள்ளது. மேல் சொன்ன எல்லா பிரச்சினைகளில் இருந்து விடுபட உங்களுடைய ஜாதக கட்டத்தில் சந்திர பகவான் வலுவாக இல்லை என்றாலும், சாதகமான பலன்களை கொடுக்க பின் சொல்லக்கூடிய விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும்.

முதலில் உங்களுடைய வீட்டில் அரிசி எப்போதுமே நிறைவாக இருக்க வேண்டும். அரிசி முழுமையாகத் தீர்ந்து விட்டது என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. குடும்பத்தில் யாருக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கிறதோ அவருடைய கையால், அரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மனதார குல தெய்வத்தையும், சந்திர பகவானையும் வேண்டிக்கொண்டு இன்றைய நாள் நன்றாக செல்லவேண்டும் என்று நினைத்து, அந்த ஒரு கைப்பிடி அரிசியை காக்கை குருவிகளுக்கு சாப்பிடுவதற்காக வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பசுமாட்டிற்கு சாப்பிட்ட கொடுக்கலாம். இப்படி செய்தால் சந்திரனின் பலம் அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை பச்சரிசியின் செய்வது மேலும் சிறப்பு.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் தினந்தோறும் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் அங்கு சென்று சிவனுக்கும் அம்பாளுக்கும் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

அடுத்து கங்கா தீர்த்தம் என்று சொல்லுவார்கள் அல்லவா. கங்கை நதியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தம் வாங்கி, அதை தினமும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர சந்திரனின் பலம் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேல் சொன்ன விஷயங்களில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வந்தால் கூட போதும். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். மன அழுத்தம் குறையும். மனதில் தெளிவு பிறக்கும். முகம் பிரகாசமாக மாறும். சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவீர்கள். வாழ்க்கையில் எல்லாமே சிறப்பாக மாறும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -