இந்த வசம்பு தீபத்தை உங்கள் இல்லங்களில் ஏற்றி பாருங்கள். பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்ந்து விடும்

enemies-vasambu
- Advertisement -

சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கின்ற போதிலும், அனைத்தும் நல்ல விதமாக நடந்து கொண்டிருக்கின்ற போதும் சிலரது மனதில் ஏதேனும் ஒரு சஞ்சலம் வந்து அவர்களை உறங்கவிடாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருக்கும். இனம்புரியாத ஒரு பயம் மனதை ஆட்கொண்டிருக்கும். ஏதோ ஒரு ஆபத்து நம் குடும்பத்தை நெருங்கி வர போகிறது என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் அவ்வப்போது உதித்துக் கொண்டே இருக்கும். மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் அதனை மனது ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ ஒரு குழப்பத்துடனே இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒருசிலரது குடும்பத்தில் தொடர்ந்து பணக் கஷ்டமும், வியாபார நஷ்டமும், உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும். இப்படி மனதை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த வசம்பு தீபத்தை மட்டும் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை வணங்கி வந்தால் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

bayam-fear

பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. குடும்பம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் பொழுதும் திடீரென்று ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை வருத்தப்பட வைக்கும். எதிர்பாராத நேரத்தில் பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும். தொழிலில் எதிரிகளின் தொல்லை அதிகமாகி விடும். மற்றவர்கள் நம்மை அழித்து அவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து தான் மனிதன் வாழ வேண்டியிருக்கிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து விடுபட எதிரிகளின் முன்னின்று சண்டை போடுவது என்பது நல்ல மனிதனுக்கு அழகாகாது. ஒருவர் நமக்கு கெடுதல் செய்கிறார்கள் என்றால் அவர்களை எதிர்த்து நாமும் அதே மாதிரி அவர்களுக்கு தீமைகளை செய்து வந்தால் அதன் பலனை நம் தலைமுறைகள் தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

murugan-silai-abishegam

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதற்காக நமது இல்லத்தில் இந்த வசம்பு தீபத்தை ஏற்றி வழிபடுங்கள். இதற்கு முதலில் ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வேப்ப எண்ணெயை ஊற்றிக் கொள்ளவேண்டும். அதனுள் 6 நெல்லிக்காய் கொட்டைகளையும், இரண்டு சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்க்க வேண்டும். பிறகு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வருவதன் மூலம் எதிரிகளின் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், மனதில் இருக்கும் சஞ்சலம் அனைத்தும் தீர்ந்துவிடும்.

- Advertisement -

ஒரு சில இல்லங்களில் எதிரிகளின் செய்வினை கோளாறுகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்கள் இந்த வேப்பெண்ணை தீபத்தில் நெல்லி கொட்டைகளுக்கு பதிலாக 9 வேப்பம் கொட்டைகளை சேர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். இவை இரண்டு பிரச்சனையும் உள்ளவர்கள் இரண்டு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி பூஜை செய்யலாம். தென்மேற்கு திசையில் தீபம் ஏற்றிவைத்து தீபத்தின் முன் அமர்ந்து கொள்ள வேண்டும்.

deepam

பின்னர் மனதை ஒருமுகப்படுத்தி நமது கவனம் முழுவதும் அந்த தீப ஒளியின் மையத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும். இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதில் நிறுத்திக் கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அந்த ஒரு பிரச்சினையை மட்டும் மனதில் ஒரு முகமாக நினைத்துக்கொண்டு, இதிலிருந்து நான் விடுபட வேண்டும், எனது இந்தப் பிரச்சனை எளிதில் என்னை விட்டு விலக வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். விளக்கில் உள்ள கொட்டைகளை மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் மட்டும் போதும். செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இந்த தீபத்தை ஏற்றி வர விரைவில் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -