நிலை வாசலில் இந்த 3 பொருள் சேர்த்த தண்ணீரை தினமும் தெளித்து வாருங்கள். வீட்டில் நிம்மதி எப்போதும் நிலையாக நிற்கும்.

nilavasal
- Advertisement -

எவ்வளவு தான் காசு பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். மன நிம்மதி இல்லாத வாழ்க்கையானது நரகத்தில் வாழக்கூடிய வாழ்க்கைக்கு சமம். ‘எங்க வீட்டில எல்லாமே இருக்குங்க. தேவைக்கு அதிகமாகவே இருக்கு. ஆனால், மன நிம்மதி என்பது ஒரு துளி கூட இல்லை. ஒரு பிடி சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை சச்சரவு, உறவுகளுக்குள் பிரிவு, நோய்நொடி பிரச்சனை, இப்படி ஏதாவது ஒரு வகையில் மன நிம்மதியைப் பெற முடியாமல் தவித்து வருகின்றோம்.’ இப்படிப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் மனநிறைவோடு பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். நம்பிக்கை இருந்தால் மட்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எச்சில் படாத பத்திரமாக இருக்கட்டும். அதில் நல்ல தண்ணீரை ஊற்றி சிறிதளவு நன்னாரி வேர், சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு மஞ்சள்தூள், இந்த மூன்று பொருட்களையும் போட்டு அந்த பாத்திரத்தை அப்படியே பூஜை அறையில், முன்னாள் இரவே வைத்துவிடுங்கள். மறுநாள் காலை இந்த மூன்று பொருட்கள் சேர்த்து ஊறவைத்த தண்ணீரை நிலை வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து, நிலை வாசலில் தெளித்து அதன்பின்பு கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி தினம்தோறும் செய்துவர உங்கள் வீட்டில் மன நிம்மதி அதிகரிக்கும். உறவுகளுக்குள் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் அகலும். நன்னாரி என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு வேர். இந்த வேர் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதேசமயம் மகத்துவமும் நிறைந்தது.

pachai-karpooram2

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தன்மை கொண்ட இந்த நன்னாரி வேர், நம் வீட்டிற்கும் குளிர்ச்சியான நிலையை கொண்டு வந்து சேர்த்துவிடும். மஞ்சள்தூளின் குணநலன் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நல்ல கிருமிநாசினி. பச்சைக்கற்பூரம் நேர்மறை ஆற்றல் ஈர்க்கக் கூடிய தன்மை வாய்ந்த ஒரு பொருள். ஆக இந்த மூன்று பொருட்களிலும் ரொம்பவும் குறைவான அளவு அந்த தண்ணீரில் சேர்த்துக் கொண்டாலே போதும். இதனுடைய வாசம் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். அவ்வளவு தான்.

- Advertisement -

இந்த தீர்த்தத்தை கொஞ்சமாக உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயும் மூலைமுடுக்குகளில் தெளித்து விடலாம். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் இந்த தீர்த்தம் கலந்த தண்ணீரை வாசலில் தெளிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

family

சரிங்க, இந்த பரிகாரத்தை நாங்கள் செய்து விட்டோம். எங்களுக்கு மன நிம்மதி வந்துவிடுமா? நிச்சயம் வரும். அதற்கு இந்த பரிகாரத்துடன் சேர்த்து நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கட்டாயம் பின்பற்றி வரவேண்டும். வீட்டில் உள்ளவர்களிடத்தில் கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது. கோபப்படக் கூடாது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும். வாழ்க்கை என்பது சண்டை போடுவதற்காக அல்ல. சந்தோஷமாக வாழ்வதற்கு என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதையுங்கள், உங்கள் வாழ்க்கை சிறப்பாகும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -