குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டிருக்கிறதா? மன நிம்மதி என்பதே இல்லையா? அப்பொழுது உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பாள் கோவிலில் இதனை செய்து பாருங்கள்

pongal
- Advertisement -

என்னதான் பல கோவில்களுக்கு சென்று பல பூஜைகள் செய்து வந்தாலும் வீட்டில் மன நிம்மதி என்பது கிடைப்பதில்லை. எப்பொழுதும் தொடர்ந்து புதுப்புது பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளும் சொல்பேச்சு கேட்பதில்லை. வேலை செய்யும் இடத்திலும் தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது. என பலவிதமான பிரச்சனைகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இவற்றை எண்ணி மனநிம்மதி இல்லாமல் பலரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கோவிலுக்கு சென்றால் எனது பாவங்கள் தீரும், மனநிம்மதி கிடைக்கும் என்று பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொருவரின் மனக் கஷ்டமும் தீர்ந்து அவர்களின் வாழ்க்கை நல்ல சூழ்நிலையில் மாற அம்பாள் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள், என்பது பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நமக்கு அருகில் இருக்கும் ஒரு தீர்வை விட்டுவிட்டு, நமக்கான தீர்வு எங்கு சென்றால் கிடைக்கும் என்று வெவ்வேறு திசையில் அலைந்து கொண்டிருக்கும். அவ்வாறு நமக்கு அருகில் இருக்கும் எந்த விஷயத்தைப் பற்றிய அருமை, பெருமையும் நமக்குத் தெரிவதில்லை.

- Advertisement -

அவ்வாறு அருகில் இருக்கும் ஒரு விஷயம் தூரமாக சென்று விட்டால் மட்டுமே அவற்றைப் பற்றிய பெருமை நமக்கு புரியும். அது போல தான் எந்த ஊராக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும் அங்கு எல்லை தெய்வம் என்ற ஒன்று இருக்கும். அது நிச்சயம் அம்பாளாக மட்டுமே இருக்கும். முதலில் நமக்கு அருகில் உள்ள தெய்வம் மட்டுமே நமக்கான அனைத்து செயல்களையும் செய்து கொடுக்கும்.

அப்படி அருகில் இருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு தொலைதூரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று என்னதான் பெரிய பெரிய பரிகாரங்களை செய்துவந்தாலும், அவற்றுக்குத் தகுந்த பலன் கிடைத்துவிடாது. எனவே முதலில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு சென்று மனமார வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் துயரங்களை அந்த அம்பாள் தீர்த்து வைப்பாள்.

- Advertisement -

அதிலும் கோவிலில் பொங்கல் வைத்து அதனை படைத்து வேண்டுதல் செய்து வந்தால் நிச்சயம் நீங்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும். இவ்வாறு செய்வது நமது முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பழமை வாய்ந்த வழக்கமாகும். எனவே கோவிலுக்கு சென்று மண்பானையில் பொங்கல் வைத்து, அதனை அம்பாளுக்கு படித்துவிட்டு, அதன் பின்னர் அந்த பொங்கலை மற்றவருக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

நிச்சயம் பொங்கலை கோவிலுக்குச் சென்று தான் வைக்கவேண்டும். வீட்டிலேயே பொங்கல் செய்து அதனை கோவிலுக்கு எடுத்துச் சென்று பிறகு பிரசாதமாக கொடுத்தால், அதில் எந்தவித பலனும் கிடையாது. எப்பொழுதும் கோவில் சன்னிதானத்திற்கு சென்று அங்கு அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து, அதனை பிரசாதமாக படைத்தால் மட்டுமே உங்கள் வேண்டுதலுக்கான பலன் கிடைக்கும்.

- Advertisement -