நிம்மதியான தூக்கமும், மன அமைதியும் இல்லையா? 21 நாட்களில் உங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரும் 1 சொம்பு தண்ணீர்.

sleepless
- Advertisement -

நிறைய பேருக்கு பணம் காசு கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் ஆனால் மன அமைதி என்பது ஒரு துளி கூட இருக்காது. இரவில் படுத்தால் கண்களை மூடி நிம்மதியாக உறங்க முடியாது. பஞ்சு மெத்தை இருக்கும். கண்களில் உறக்கமில்லை. பங்களா இருக்கும் மனதில் நிம்மதி இல்லை. இப்படிப்பட்ட வாழ்க்கை எதற்கு. இருந்தும் இல்லாதது போல. உங்களுடைய வாழ்க்கையில் மன நிம்மதியையும் தூக்கத்தையும் பெற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த சொம்பில் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த சொம்பில் தண்ணீர் நிரம்ப இருக்கட்டும். தண்ணீர் குறைவாக இருக்க வேண்டாம். இந்த தண்ணீரில் இரண்டு துளசி இலைகளை போட்டு அப்படியே தூங்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை எழுந்து முதலில் இந்த தண்ணீரை கொண்டு போய் ஏதாவது ஒரு செடிக்கு ஊற்ற வேண்டும். உங்களுடைய வீட்டில் செடி இல்லை என்றால் ஒரு சிறிய தொட்டியில் ஏதாவது ஒரு செடியை வைத்து அதற்கு இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள்.

- Advertisement -

காலையில் எழுந்து முதலில் செடிக்கு தண்ணீர் ஊற்றி இந்த பரிகாரத்தை முடித்து விட்டீர்கள். அடுத்தபடியாக உங்களுடைய காலை கடமைகள், வேலைகளையெல்லாம் முடித்து விடுங்கள். குளித்து விடுங்கள். பின்பு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வீர்கள். அதன்பின்பு ஏதாவது ஒரு இனிப்பு கலந்த பொருளை கொண்டுபோய் பறவைகளுக்கு இறையாக கொடுக்க வேண்டும். மொட்டை மாடியிலேயே நிறைய பறவைகள் இரை தேடி வரும். அந்த பறவைகளுக்கு இனிப்பான பிஸ்கட்டுகளை கூட சாப்பிட கொடுக்கலாம்.

புறாக்கள் கிளிகள் குருவிகள் தானியங்களை விரும்பி சாப்பிடும் அல்லவா. ஏதாவது ஒரு தானியத்தை சர்க்கரை கலந்த தண்ணீரில் ஊறவைத்து கூட அந்த தானியத்தை எடுத்து பறவைகளுக்கு இறையாக கொடுக்கலாம். இதையும் தினம்தோறும் செய்து வர வேண்டும்.

- Advertisement -

இதோடு சேர்த்து வாரம்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். நிச்சயமாக எல்லா கோவிலிலும் பிள்ளையார் சந்நிதி இருக்கும் அல்லவா. ஆகவே, திங்கட்கிழமை தோறும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று மூன்று முறை வலம் வந்து, இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்துகொண்டால் கெட்ட கனவு வராது. ராத்திரியில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

மேலே சொன்ன பரிகாரங்களை செய்து வர 21 நாட்களில் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும். 21 நாட்களுக்குப் பின்பு பரிகாரம் செய்வதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து இந்த பரிகாரங்களை செய்யலாம். எந்த கஷ்டம் ஆக இருக்கட்டும் பணக்கஷ்டம், மனக் கஷ்டம், உடல் உபாதைகள், வீண்விரையம், மருத்துவச் செலவு, இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான நல்லதொரு தீர்வினை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். கெட்ட கனவு வராது. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மனதில் இனம் புரியாத அமைதி வரும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்

- Advertisement -