மனதில் இருக்கும் கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு கிடைக்க இந்த ஒரு தீபத்தை உங்கள் வீட்டு வாசற்படியில் ஏற்றி விடுங்கள் போதும்

deepam
- Advertisement -

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் பிரச்சினை இல்லாத மனிதர் என்று எவருமில்லை. தங்களது வாழ்வில் ஒவ்வொருவரும் அவரவரின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல விதமான பிரச்சனைகளை சந்தித்து தான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவ்வாறான பிரச்சனைகளில் இருந்தும் மனக் குழப்பங்களில் இருந்தும் விடுபடுவதற்காக இந்த ஒரு தீபத்தை உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் ஏற்றி வைத்தால் போதும். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து இனி நடப்பவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும். வாருங்கள் இந்த தீப வழிபாட்டை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

happy

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்தரம் இல்லாத நிலைமை, எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலைமை, தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய், திடீர் அவமானம், மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், உறவினர்கள் இடையே மனக்கசப்பு, கணவன் மனைவி இடையே சண்டை, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சுலபமான பரிகாரம் இந்த வென்கடுகு தீபமாகும்.

- Advertisement -

நம் வீட்டில் தூபம் காட்டும்பொழுது அதனுடன் இந்த வெண்கடுகையும் சிறிதளவு சேர்த்து தூபம் காட்டி வந்தால் நமது வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து வளமான வாழ்வு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல தேவையில்லாத மனக் குழப்பங்களும், பிரச்சனைகளும் தீர்வதற்கு இந்த வெண்கடுகு தீபத்தை முறையாக ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் கூடிய விரைவில் நன்மை உண்டாகும்.

venkadugu

வெண்கடுகு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகும். இந்த புனிதமான வெண் கடுகினை கையில் சிறிதளவு எடுத்துக்கொண்டு, கையை இறுக்கமாக மூடி உங்கள் தலையை வலது புறமாக மூன்று சுற்று சுற்ற வேண்டும். குறிப்பு: வலது புறம் மட்டும் மூன்று சுற்று சுற்ற வேண்டுமே தவிர இடதுபுறம் சுற்றக்கூடாது.

- Advertisement -

பின்னர் இந்த வெண்கடுகை ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து, அதனுடன் சிறிதளவு கற்பூர துண்டையும் சேர்த்து ஒரு முடிச்சாக கட்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் வீட்டின் நிலை வாசற்படிக்கு வெளியில் சிறிதளவு வேப்பிலையை தரையில் பரப்பி வைத்து, அதன் மீது ஒரு மண் விளக்கை வைத்து, அதனுள் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் முடிச்சாக கட்டி வைத்துள்ள வெண்கடுகை இந்த நல்லெண்ணையில் மூழ்குமாறு வைத்து விட்டு தீபமேற்ற வேண்டும்.

white-cloth-vellai

இந்த தீபம் எரிந்து அதில் இருக்கும் வெண்கடுகு எவ்வாறு நெருப்பில் பொசுங்குகிறதோ அதுபோல உங்கள் மனக் குழப்பங்களும், பிரச்சனைகளும் விரைவாக தீர்ந்து நல்ல பலன் உண்டாகும். இந்த தீபம் முழுமையாக எரியும் வரை அதன் அருகில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் மன குழப்பங்களையும், பிரச்சனைகளையும் நினைத்துக்கொண்டே அந்த தீபத்தை கவனித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே நீங்கள் செய்யும் பரிகாரத்திற்கான முழு பலனையும் அடைய முடியும்.

veppilai-agal-deepam

உங்கள் வீட்டில் உங்களைத் தவிர வேறு யாருக்கேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அவர்களையும் இவ்வாறு பரிகாரம் செய்து பலன் அடைய செய்யலாம். அது மட்டுமல்லாமல் இந்த தீபத்தை தவறாமல் வீட்டிற்கு வெளியில் மட்டும்தான் ஏற்றவேண்டும். தவறியும் வீட்டினுள் ஏற்றிவிடக்கூடாது. வீட்டின் முன்புறம் இடம் இல்லாவிட்டாலும் வீட்டின் பின்புறம் அல்லது மொட்டை மாடியிலும் இந்த தீபத்தை ஏற்றி இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -